search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை மிரட்டல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தற்கொலை மிரட்டல் விடுத்து தி.மு.க. நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பதாக கூறிவரும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவர்னரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கவர்னரை மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு இடையூறாக உள்ள கவர்னரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. நிர்வாகி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர் நலச்சங்க தலைவரும், தி.மு.க. தொழிற்சங்க தலைவராகவும் இருப்பவர் மானகிரி கணேசன். இவர் பெயரில் கவர்னரை மாற்றவேண்டும் என நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பாராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகள் கடைகோடி மக்கள் வரை சேர வேண்டும் என விரும்பி செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். அவரை வருகிற 27-ந் தேதிக்குள் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றாவிட்டால் 28-ந்தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலையின் முன்பு தீக்குளித்து சாவேன்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்கொலை மிரட்டல் விடுத்து தி.மு.க. நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அப்பா அடித்ததால்,மனமுடைந்த இவர் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார்.
    • தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமம் வடக்கு தெரு, காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது 2-வது மகன் கபில் தேவ் (வயது20).சம்பவத்தன்று குடிபோ தையில் தந்தை- மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி, கபில்தே வை அடித்தார்.

    இதனால் மனமுடைந்த கபில்தேவ் இரவு 12.30 மணி அளவில் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திட்டக்குடி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மேலே ஏறி திட்டக்குடி தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்இரவு 1 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×