search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை தேர்தல்"

    பாராளுமன்ற தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை தி.மு.க.வும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பா.ம.க. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது.

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

    தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம்.

    தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு.

    இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம்.

    இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக்காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

    பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்..... புதிய வரலாறுகளை படைக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
    “வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையும்” என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரத்தில் பிரசாரத்தின்போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று (நேற்று) பிரசாரம் முடிவடைகிறது. ஆனால் எடப்பாடியாரின் சாதனைகள் தொடரும். சாதகமான கருத்துக்களை தெரிவிப்பவர்களை மட்டுமே டி.டி.வி.தினகரனுக்கு பிடிக்கும்.

    அவர் பித்தலாட்ட அரசியல் செய்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார். இன்று ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும், அ.தி.மு.க.வை முடக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இதுதான் அவருடைய வாடிக்கை. தி.மு.க. செய்கிற வேலையைத்தான் தினகரன் செய்கிறார்.

    தினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் கிடையாது. ஜெயலலிதா பெயரை சொல்லும் அருகதை தினகரனுக்கு கிடையாது.

    மக்கள் நீதிமய்யம் சார்பில் என் மீது போடப்பட்டு உள்ள வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர் பக்தர், ஜெயலலிதா தொண்டர்கள், எடப்பாடியாரின் தம்பிகள் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மாற்றம் வரும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எளிமையான ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட மக்கள் ரோட்டில் வந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க.வின் பின்னால் மக்கள் இயக்கம் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மக்கள் தீர்ப்பு அமையும்.

    தி.மு.க. இதுவரை நேர்மையான முறையில் ஆட்சியை கைப்பற்றவில்லை. அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் குறுக்கு வழியில் ஆட்சி பிடித்தனர். மக்கள் நேர்மையான ஆட்சியை விரும்புகின்றனர். வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. இரண்டாக உடையப்போகிறது.

    காங்கிரஸ் கட்சி உடைந்தது போன்று, தி.மு.க.வும், முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்த 70 வயதை நெருங்கும் தலைவர் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் பின்னால் இருக்க கூடியவர்கள் மற்றொரு அணியாகவும் பிரிய போகிறார்கள். தி.மு.க.வில் உள்ள நல்ல மனிதர்கள் வந்து விடுவார்கள். அல்லது மாற்று அணி உருவாக்குவார்கள். இதுதான் தி.மு.க.வின் நிலை.

    ஆட்சியை கைப்பற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் வசனம் எழுதி பேசிக் கொண்டு இருக்கிறார். இது சினிமா படத்துக்கு பொருந்தும். நிஜத்தில் நடப்பது இல்லை. எடப்பாடியார் ஆட்சி நிம்மதியாக கம்பீரமாக நடைபெறும். எனவே, எடப்பாடியார் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும்.

    இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    நரேந்திர மோடி மூலம் அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். #Congress #KSAlagiri #ADMK
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாத அளவில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்ப்பை எப்படியாவது சரிகட்டுவதற்கு அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. திரைமறைவு தந்திரங்களை செய்து வருகிறது.

    அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்தால் படு குழியில் விழ நேரிடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள முதல்- அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குறிப்பாக நரேந்திர மோடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை பாராளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தாமல் தள்ளி வைப்பதற்கு அ.தி.மு.க. தலைமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

    கடந்த 15 மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாமல் அந்த தொகுதிகளில் மக்கள் குறைகளை கேட்க எவரும் நாதியில்லாத நிலை இருந்து வருகிறது. இந்த அவலநிலையில் இருந்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பாராளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.

    நரேந்திர மோடி மூலம் அ.தி.மு.க. தலைமை 21 சட்டமன்ற தொகுதி தேர்தல்களையும் நடத்தாமல் ஒத்திப் போடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுவே அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணிக்கான பேரங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.

    அப்படி தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோகிற நிலை ஏற்பட்டு, ஆட்சி பறிபோகும் என்கிற அச்சத்தின் காரணமாக இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அ.தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

    ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீது குட்கா வழக்கு, ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு ரூபாய் 84 கோடி பணம் கொடுத்த வழக்கு மற்றும் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பு அரணாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் அ.தி.மு.க.வின் எதிர்காலமே பா.ஜ.க.வின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

    எனவே, அரசமைப்புச் சட்டப்படி, ஜனநாயக முறைப்படி 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பாராளுமன்றத் தேர்தலோடு இணைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்.

    இதில் அ.தி.மு.க. தலைமையின் வற்புறுத்தலின் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து போகுமேயானால் அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படுமென எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறி உள்ளார். #Congress #KSAlagiri #ADMK
    வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #TNAssemblyElection
    சேலம்:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் சேலம் வந்தார்.

    இன்று காலை சேலம் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் மு.க.ஸ்டாலின் காரில் அங்கு வந்தார். முதலில் அவர் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் தவறாமல் வந்திருக்கிறார்களா? என பெயர் வாசித்து ஆய்வு செய்தார்.

    விரைவில் 21 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 21 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி உறுதியாக உள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர். பா.ஜ.க. ஆட்சி தலைதூக்க விடக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    நாங்கள் உத்தரவு போட்டாலும், அதனை செயல்படுத்துவது உங்கள் கையில் தான் உள்ளது. உத்தரவுகளை அறிவிப்பது மட்டும் தான் நாங்கள். அதனை நிறைவேற்றுபவர்கள் நீங்கள்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியில் தி.மு.க.வுக்கு எத்தனை ஓட்டுகள் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஓட்டுகள் எவ்வளவு உள்ளது. இந்த ஓட்டுகளை நாம் வாங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.

    தி.மு.க.வின் வளர்ச்சி திட்டங்களை நாம் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஜெயலலிதாவுக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தி.மு.க. பெற்றி பெறும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மறுக்கிறார்கள். இதற்கான கூட்டம் தான் இந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்.


    இன்று ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனை அராஜகங்கள் அரங்கேறுகிறது. இது ஊழல் ஆட்சி மட்டுமல்ல. கொள்ளைக்கார ஆட்சி மட்டுமல்ல. கொலைகார ஆட்சியாக நடக்கிறது.

    ஓ.பன்னீர்செல்வம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. தீர்ப்புக்கு பின் இந்த ஆட்சி நீடிக்காது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. இதனால் தி.மு.க. வெற்றிக்காக நீங்கள் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசியதாவது:-

    கடந்த 3-ந்தேதி திருவாரூரில் தலைவருடைய தொகுதியில் புலிவிலங்கு என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் நான் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தேன். இதனை தொடர்ந்து எல்லா தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க வரலாம் என நேற்று இரவு திடீரென முடிவு எடுத்தேன். நியாயமாக இன்று காலை நான் சேலத்தில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்திருக்க வேண்டும். மாலையில் ஈரோட்டுக்கு போக வேண்டும். 2 நாட்களாக நான் சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

    கிராமத்தில் இருந்து தான் அரசியல் தொடங்குகிறது. கிராமங்கள் தான் அரசியலை நிர்ணயிக்கிறது. முதல் முதலில் மக்கள் பிரநிதிகளை தேர்ந்தெடுக்கிற முறை எங்கிருந்து தொடங்குகிறது என்று சொன்னால் கிராமத்தில் இருந்து தான்.

    இது படிப்படியாக மாறி வாக்குச்சீட்டு முறைக்கு வந்து விட்டது. இப்போது எலக்ட்ரானிக் முறைக்கு வந்து விட்டது.

    எம்.பி.யை தேர்ந்து எடுக்கிறோம். அவர் பாராளுமன்றத்திற்கு போகிறார். 6 சட்டமன்ற தொகுதிக்கு சேர்த்து ஒரு எம்.பி.

    அதுபோல் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ. தேர்ந்தெடுத்து சென்னை கோட்டைக்கு அனுப்புகிறோம். பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசுவார்கள். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள்.

    அதற்கு அடுத்து பார்த்தீர்களானால் உங்கள் ஊருக்கு ஒரு தலைவரை, ஒரு மெம்பரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் உங்கள் ஊர் பிரச்சனையை உள்ளாட்சி அமைப்பு கூட்டத்திலோ, ஊராட்சி ஒன்றிய கூட்டத்திலோ பேசி அதற்கான நிதியை வாங்கி மத்திய அரசு கிராமத்திற்கு என தனியாக நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதியை வாங்கி பயன்படுத்தி அந்த காரியங்களை செய்து முடிக்க வேண்டும். இது தான் உள்ளாட்சி அமைப்பு.

    இப்போது உள்ளாட்சி அமைப்பு இல்லை. ஆட்சியும் முறையாக இல்லை. மத்தியில் இருக்கிற ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் இருக்கிற ஆட்சியாக இருந்தாலும் சரி எதுவும் முறையாக இல்லை. ஆகவே முறையாக இல்லாத காரணத்தினால் தான் இன்றைக்கு நாடு ஒரு குட்டிச்சுவரான நிலைக்கு தள்ளிக்கொண்டு போயிருக்கிறது.

    நீங்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு இங்கு வந்திருக்கிறீர்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

    மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம். மக்களுடைய மனங்களை எல்லாம் வெல்வோம் என்ற அந்த முழக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்த பணியை தொடங்கி இருக்கிறோம்.

    நான் 2 வாரத்திற்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு போயிருந்தேன். அங்கு மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஒரு பெரிய மாநாட்டை நடத்தினார். இதில் பல்வேறு மாநில தலைவர்கள், முதல்-அமைச்சர்கள், பல அரசியல் கட்சி தலைவர்கள் வந்தார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் வந்தார்கள்.

    எல்லோரும் என்னை பார்த்து கேட்ட முதல் கேள்வி கிராம சபை கூட்டத்தை எப்படி சிறப்பாக நடத்துகிறீர்கள்?. உங்களால் எப்படி முடிகிறது என கேட்டார்கள். நான் விளக்கம் சொன்னேன். நான் சொன்ன உடனே அவர்கள் திருப்பி சொன்னார்கள். இதுவரைக்கும் தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே, உலகத்திலே இப்படிப்பட்ட கிராம சபை கூட்டத்தை யாரும் நடத்தியிருக்க முடியாது என பெருமையாக சொன்னார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து மு.க.ஸ்டாலின் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் ஒவ்வொரு பேராக எழுந்து வந்து தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள குறைகளை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

    முன்னதாக நேற்று இரவு சேலம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தீவட்டிப்பட்டியில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #TNAssemblyElection
    பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம் என்றும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயராக உள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #EVKSElangovan #ParliamentElection
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

    முன்னதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாறு காணாத வகைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. யானைப்பசிக்கு சோளப்பொரியை போடுவது போல் மத்திய அரசு ரூ 1.50 மட்டும் குறைத்து உள்ளது.

    தேர்தலுக்கு பயந்தே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை இந்த அரசு தள்ளி வைத்துள்ளது. முதல்வரை கேட்டால் தலைமை செயலாளரை கைகாட்டுகிறார். முதல்வர் சொல்லித்தான் ஒரு தலைமை செயலாளர் செயல்பட முடியும் என கூற விரும்புகிறேன்.


    டெல்லியில் பிரதமரை சந்திக்க முதல்வர் செல்கிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மோடியை சந்திக்க செல்கிறாரே....தவிர பொதுமக்களின் நலனுக்ககாக அல்ல.

    நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் நடிகர்களாக நடித்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம். காங்கிரஸ் கட்சி அதை சந்திக்க தயராக உள்ளது.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் கிடையாது. தலைவர் யார் என்பதை தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #EVKSElangovan #ParliamentElection #TNAssemblyElection

    நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDinakaran
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தை பொறுத்தவரை ஏற்கனவே பல ஆண்டுகளாக போராடி வரும் விவசாய சங்க தலைவர்களின் கருத்தை அறிந்து செயல்பட வேண்டும். ஆனால் விவசாயிகளின் போராட்டத்துக்கு அனுமதி தராத அரசாக தமிழக அரசு உள்ளது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்கும் முதல்வராக செயல்பட்டார். ஆனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க இயலாது என 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற வினோதமான முதல்-அமைச்சரை நாம் பெற்றுள்ளோம். தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக அமைத்து தொடர்ந்து ஒழுங்காற்று குழுவையும் ஏற்படுத்தி தண்ணீர் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

    கடந்த 3-ந் தேதி அ.ம.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்ற அன்று வெற்றிவேல் ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அதன் பிறகு வந்த அவர் கட்சி அலுவலகத்துக்கும் வர தொடங்கிவிட்டார். தங்க.தமிழ்ச்செல்வன் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.

    நாங்கள் கட்சி அலுவலக திறப்பு விழாவை 27-ந் தேதி அன்று நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு 3-ந் தேதிக்கு மாற்றினோம். பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் ரீதியான அவதூறுகளை கூறிய நடிகர் எஸ்.வி.சேகருக்கு உச்ச நீதிமன்றமே ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், மத்திய பா.ஜ.க. அரசுக்கு பயந்து தமிழக அரசு எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசின் இயலாமையை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்ப அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறார்.

    அவருக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் சுமார் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
    ×