search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பணை"

    • 7 தடுப்பணைகள் கட்டும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
    • இந்த தடுப்பணை ரூ.5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், ஒ.சிறுவயல் கிராமம் அருகே, தேனாற்றின் குறுக்கே ஒய்யகொண்டான் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுகிறது.

    தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பெரியகருப்பன் கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்தரப்பு மக்களும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும், அனைத்துறைகளையும் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டு வருகிறார். குறிப்பாக, வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் ஏராளமான விளைநிலைங்களையும் ஏரி, குளம், கண்மாய்கள் நிறைந்த மாவட்டமுமாக உள்ளது. மேலும், பாலாறு, தேனாறு, வைகையாறு, மணிமுத்தாறு போன்ற ஆறுகள் சிவகங்கை மாவட்டத்தை கடந்து செல்கின்றன. இருப்பினும் கடைமடை பகுதியாக இருப்பதால் போதுமான அளவு நிரந்தரமான நீர் ஆதாரம் இல்லாமல் வறட்சி சூழ்ந்த மாவட்டமாக உள்ளது.

    இதனைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மக்களின் வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தாண்டு 7 தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே 4 தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இந்த தடுப்பணை ரூ.5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. 380 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெற உள்ளன. 7 கண்மாய்களுக்கு இதில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மறைமுகமாக இந்த பகுதிகளில் உள்ள அரண்மனைப்பட்டி, பலவான்குடி, ஒ.சிறுவயல், குன்றக்குடி, பாதரக்குடி போன்ற கிராமங்கள் பாசன வசதி பெற உள்ளன. ஏக்கர் ஒன்றுக்கு இதற்காக ரூ.1.42 லட்சம் செலவிடப்படவுள்ளது.

    இந்த திட்டத்தில் தடுப்பணை, மணல்போக்கி கட்டுதல் மற்றும் ஒய்யகொண்டான் கண்மாய்க்கும் சிறுவயல் கண்மாய்க்கும் புதிய தலைமதகுகள் கட்டுதல், வௌ்ளக்கரைகளை உயர்த்தி புனரமைத்தல், கால்வாய் மராமத்து பணி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, வேளாண் சார்ந்த தொழில்க ளுக்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகளுக்கு போன்ற கால்நடைகளுக்கும் கூடுதல் நீர் ஆதாரமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) கார்த்திகேயன், கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், சீனிவாசன், விக்னேஸ்வரன், சரவணன், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், உதவிப்பொறியாளர்கள் பாலமுருகன், கலைவாணி, பிரகாஷ், ஆனந்த மாரியவளவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத்தலைவர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும்.
    • தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

    சீர்காழி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப்பாலை -மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வலியுறுத்தி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அளக்குடி பகுதியில் நேரில் சென்று கொள்ளிடம் ஆற்றில் பார்வையிட்டார்.

    அப்போது பொதுப்பணித் துறை அதிகாரியிடம் திட்ட வரைப்படத்தினை பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இவ்வழியாக கடல் நீர் 22 கி.மீ உட்புகுந்துள்ளது. கோடை காலத்தில் நீர் நிலைகள் உப்பு நீராக மாறிவிடுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த நீண்ட நாளாக வலியுறுத்தப்படுகிறது.

    இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தடுப்பணை கட்ட வலியுறுத்தினேன். அதன்படி இப்பகுதி ஆய்வு செய்யப்பட்டு ரூ.580 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் 25 கிலோ மீட்டர் தண்ணீரை தேக்கிவைக்க முடியும். 200 கிராமங்கள் பயன் அடையலாம். அரசு உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும்.காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்ளும் வகையில் அரசு திட்டங்கள் தயார் செய்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிக அளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார்

    .டெல்லி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக திட்ட அறிக்கையைவிவாதிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த கூட்டம் வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக இதற்கு தடை பெற வேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடக பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.2017ம் ஆண்டில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட ரூ.430 கோடி அப்போதைய அ.தி.மு.க அரசால் ஒதுக்கப்ப–ட்டது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தனது தொகுதிக்கு திட்டத்தை மாற்றி எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் உடனடியாக தடுப்பணை கட்டும் விவகாரத்தில் முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும். தடுப்பணை கட்ட தாமதித்தால் எனது தலை–மையில் போராட்டம் நடத்தப்படும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது தடுக்கப்பட வேண்டும் என்றார்.

    அப்போது பா.ம.க மாவட்ட செயலாளர் சித்தமல்லி.ஆ.பழனிசாமி, மாவட்ட தலைவர் ரெ.அன்ப–ழகன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஜி.வி.முருகவேல், ஒன்றிய கவுன்சிலர் சிவபாலன், ஒன்றிய செயலாளர்கள் பாலதண்டாயுதம், தியாகராஜன், குமார், நகர செயலாளர் சின்ணையன், செயற்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சின்னையன், நீர்வளத்துறை காவிரி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் கே.மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    கடலூர், ஜூன்.5-

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.

    இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். உயிர் பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டனர். அவர்கள் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அந்த வேனில் 7 பேரும் ஏற்றி செல்லப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×