search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை சரிவு"

    • உச்சத்தில் விற்ற தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.
    • போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை 1கிலோ ரூ.200க்கு மேல் விற்பனையானது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு ரேசன் கடை மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்க நடவடிக்கை எடுத்தது. சில வியாபாரிகள் தக்காளி விற்றே லட்சாதிபதி ஆனார்கள். ஆனால் தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.

    தேனி மாவட்டம் போடி அருகே ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் தக்காளி விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்தனர். ஆனால் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.உரம், பூச்சி மருந்து பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    இதனால் ரூ.200க்கும் மேல் விற்ற தக்காளி தற்போது யாரும் வாங்க முன்வராத நிலையில் செடியிலேயே அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தக்காளிகளை விற்பனை செய்யும் சந்தைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவுக்கு கூட போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
    • அப்படியே எடுத்துச் சென்றாலும் அங்கே வாங்க போதுமான வியாபாரிகள் இல்லாததால் சந்தையிலே கொட்டிவிடும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பால க்கோடு மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, பேகரஹள்ளி, பெல்ரம்பட்டி, கரகூர், சீங்காடு, சீறிம் பட்டி, ஐந்து மைல்கள், உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வழக்கமாக சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்கின்றனர்.

    அவற்றை, பாலக்கோடு பகுதியில் அமைந்த பிரத்தியோக தக்காளி சந்தையில் ஏற்றுமதி செய்து வருவது வழக்கம்.

    பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து ஈரோடு, தேனி, திண்டுக்கல், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கும். கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தக்காளி ஏற்றுமதியாகிறது.

    கடந்த இரண்டு வாரமாக தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.10 குறைந்து விற்பனையாவதால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு, சாகுபடி செய்த தக்காளிகளை பறிக்காமல் விளை நிலத்திலேயே விட்டுள்ளனர்.

    பாலக்கோடு தக்காளி சந்தையில் ஒரு கூடை விற்பனைக்கு 20 ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்கின்றனர். தக்காளி விற்பனை செய்ய வரும் விவசாயிகள் சுங்கக்கட்டணம் கட்டி விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

    தற்போது 25 கிலோ வரை எடை கொண்ட தக்காளிப்பழங்கள் மிகவும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.120 மட்டுமே விலை போவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    கடந்த காலங்களில் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்து கட்டுப்படியான விலை கிடைக்காமல் உள்ளதால் தக்காளிகளை விற்பனை செய்யும் சந்தைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவுக்கு கூட போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அப்படியே எடுத்துச் சென்றாலும் அங்கே வாங்க போதுமான வியாபாரிகள் இல்லாததால் சந்தையிலே கொட்டிவிடும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் விலையில்லாமல் எடுத்து வரும் தக்காளிகள் அங்கேயே சாலை ஓரங்களில் கொட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் உரிய விலை இல்லாததால் விவசாயிகள் பலர் தற்போது தக்காளிப் பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். ஆகவே தக்காளியை அரசு கொள்முதல் செய்து உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வெப்பத்தால் அதிக அளவில் பழுக்கும் நிலையில் தக்காளி மார்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது/
    • விலை குறைவு தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தக்காளி செடிகளில் உள்ள பழங்கள் வெப்பத்தால் அதிக அளவில் பழுக்கும் நிலையில் தக்காளி மார்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி விலை கிலோ 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனையானது.

    கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. ஒரே மாதத்தில் தக்காளி வரத்து அதிகரித்து அதன் காரணமாக விலை குறைந்துள்ளது.

    இந்த விலை குறைவு தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை குறைவு காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயாரித்து விற்பனை செய்ய வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

    வாகனம் விவசாயிகளுக்கு பயன் இல்லாத வகையில் உள்ளது. இதுபோன்று தக்காளி விலை குறைவான காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விவசாயிகள் விற்பனை செய்ய விற்பனை சந்தையை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    • தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • கடந்த மாதம் நாட்டுத் தக்காளி உழவர் சந்தையில் கிலோ ரூ. 40 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை உச்சத்தில் இருந்த தக்காளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    சேலத்துக்கு தம்மம்பட்டி, மல்லூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், தாரமங்கலம், இளம்பிள்ளை, அரியானூர் ஆகிய இடங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். கடந்த சில மாதங்களாக தக்காளி வரத்து மிகவும் குறைந்து இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை, அரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்தும் சேலத்துக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால், சேலம் உழவர்சந்தையிலும், வெளி மார்க்கெட்டிலும் தக்காளி விலை உயர்ந்தது. கடந்த மாதம் நாட்டுத் தக்காளி உழவர் சந்தையில் கிலோ ரூ. 40 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவ மழை கைகொடுத்ததை அடுத்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட், உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மார்க்கெட்டு களில் காய்கறிகள் விலை விபரம் வருமாறு:-

    தக்காளி-ரூ.10, உருளைக்கிழங்கு ரூ.40,35, சின்னவெங்காயம் ரூ. 70,60, பெரிய வெங்காயம்- ரூ. 35,30,25, பச்சை மிளகாய் - ரூ.28,25, கத்தரிகாய்- ரூ. 50,30, வெண்டைக்காய்- ரூ. 18,15, முருங்கைக்காய்- ரூ. 90,70, பீர்க்கன்காய்- ரூ. 26,20, சுரைக்காய்- ரூ. 20,15, புடலங்காய் - ரூ. 24,20, பாகற்காய்- ரூ. 40,36, தேங்காய்- ரூ. 30,25, முள்ளங்கி- ரூ. 16,14, பீன்ஸ் - ரூ. 28, அவரை(பட்டை)- ரூ. 40, புஸ் அவரை- ரூ. 50, கேரட்- ரூ. 50, வாழைப்பழம்- ரூ.40,30,25, கீரைகள்-ரூ. 20,15, பப்பாளி- ரூ. 25,20, கொய்யா- ரூ. 40, சப்போட்டா- ரூ. 40, மாதுளை- ரூ. 180, அன்னாசி- ரூ. 80,60, சாத்துகொடி-ரூ. 60, ஆப்பிள்- ரூ.120,100.

    • சந்ைதயில் ஒரு கிலோ தக்காளி ரூ.13க்கு விற்பனையாகி வருகிறது.
    • சந்தைக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தைக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கோவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தையில் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

    ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு தொண்டா–முத்தூர், நாச்சிபாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது சந்தைக்கு அதிகளவிலான தக்காளி வந்து கொண்டிருக்கிறது.

    ஆனால் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகி வந்தது.

    தற்போது உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10ல் இருந்து ரூ.13 வரை விற்பனையாகிறது.

    தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து உழவர் சந்தையில் கடை நடத்தி வரும் சுரேஷ் என்பவர் கூறியதாவது:-

    சந்தைக்கு கோவை தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து அதிகளவில் தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது. தக்காளிகள் அதிகமாக வந்தாலும் விலை குறைவாகவே காணப்படுகிறது.

    கடந்த 1½ மாதங்களாக தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.13 வரை விற்பனை–யாகி வருகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது என்றார்.

    ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    தக்காளி-ரூ.13, கத்திரி-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.30 முதல் ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.35, சின்னவெங்காயம்-ரூ.70, பெரிய வெங்காயம்-ரூ.26க்கு விற்பனையாகிறது.

    • இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • சந்தையில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, ராயக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநில தக்காளிகள் தினசரி மார்க்கெட்டிற்கு வரத்து இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது.

    கடந்த மே 1-ம் தேதி ஒரு கிலோ தக்காளி 30 ஆக இருந்தது. 15-ம் தேதி 50 ஆக உயர்ந்தது. பின்னர் விலை மளமளவென உயர்ந்து கடந்த மே 23-ம் தேதி 74 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ 120 ரூபாயை எட்டியது.

    பின்னர் படிப்படியாக குறைந்து கிலோ தக்காளி 50 ரூபாயில் தொடர்ந்து இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக தக்காளி கிலோ 30 முதல் 34 ரூபாய் வரை ஏற்றம், இறக்கமாக இருந்து வந்தது.

    பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பெல்ராம்பட்டி, பஞ்சப்பள்ளி, அத்திமுட்லு, திருமல்வாடி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

    இதனால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கி இன்று உழவர் சந்தையில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் விளையும் தக்காளிகளுக்கென்று தனி மவுசு உள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் 15 கிலோ கூடை 200 ரூபாய்க்கும், 28 கிலோ கூடை 300 முதல் 350 ரூபாய் வரை வாங்கி செல்கின்றனர்.

    ×