search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மண்"

    • போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்த ப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் களியக்கா விளை போலீசார் இன்று அதிகாலை மலையடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.

    போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், டெம்போவை சோதனை செய்தபோது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. அதனை அனுமதி இல்லாமல் கடத்துவதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து செம்மண்ணுடன் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியில் இருந்து செம்மண் அள்ளுவதற்க்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் கைப்பற்றி னர்.

    தப்பி ஓடிய டெம்போ டிரைவர் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவட்டார் போலீசார் சோதனை நடத்தினர்.
    • டிரைவர் சாலின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவட்டார் போலீசார் அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது 2 மினி வேன்களில் சிலர் செம்மன் ஏற்றிக் கொண்டு இருந்தனர். போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்ததோடு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சாலின் என்பவரையும் கைது செய்தனர்.

    • அனுமதியில்லாமல் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்
    • 2 வேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் உதவி சூப்பிரண்டு விவேகானந்த் சுக்லா தலைமையில் நேற்று மாலை தக்கலை போலீசார் திருவிதாங்கோடு திக்கணங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்பிலாவிளை பகுதியில் அனுமதியில்லாமல் மண் கடத்த படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே ஏஎஸ்பி விவேகானந்த் சுக்லா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்திய கும்பல் தப்பி ஓடியது. அப்பகுதியில் மண் ஏற்றி நிரம்பிய நிலையில் இருந்த 2 வேன்களை போலீஸார் பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ×