search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியில்லாமல் செம்மண் கடத்திய 2 வேன்கள் பறிமுதல்
    X

    அனுமதியில்லாமல் செம்மண் கடத்திய 2 வேன்கள் பறிமுதல்

    • அனுமதியில்லாமல் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்
    • 2 வேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் உதவி சூப்பிரண்டு விவேகானந்த் சுக்லா தலைமையில் நேற்று மாலை தக்கலை போலீசார் திருவிதாங்கோடு திக்கணங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்பிலாவிளை பகுதியில் அனுமதியில்லாமல் மண் கடத்த படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே ஏஎஸ்பி விவேகானந்த் சுக்லா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்திய கும்பல் தப்பி ஓடியது. அப்பகுதியில் மண் ஏற்றி நிரம்பிய நிலையில் இருந்த 2 வேன்களை போலீஸார் பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×