search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரசம்காரம்"

    • நேற்று வேல் நெடுங்கன்னியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. சிக்கலில் வேல்வாங்கி திருசெந்தூரில் சம்ஹாரம் செய்தார் முருகன் என்று கந்தபுராண த்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று வேல்நெடுங்கன்னியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியதை தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகன் சூரபத்மன் தலையை , வெட்ட வெட்ட முளைக்கும் தலைகளை சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் தொடர்ந்து முருகப்பெரு மானுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான்.சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள்.

    இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள்.

    அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழியாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்சு கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும்போது காளியம்மனாக உருவெடுத்தாள்.

    இங்கு 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

    1) கருங்காளி, 2) பத்ரகாளி, 3) சந்தியம்மன், 4) அங்காளம்மன், 5) தட்டத்தி அம்மன், 6) பரமேஸ்வரி, 7) வீராகாளி, 8) அறம் வளர்த்த நாயகி அம்மன்

    இதில் வீராகாளியம்மன் மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது.

    இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை கான மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.

    • திருப்பரங்குன்றம் பங்குனி உத்திர விழாவில் பவுர்ணமி கிரிவலமாக வந்து திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • நாளை சூரசம்காரம் நடக்கிறது.



    9-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தையொட்டி தயார் நிலையில் உள்ள தேர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி பெரு விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி சுப்ரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில், தங்க குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    பங்குனி பெருவிழாவின் 9-ம் நாளான இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. பவுர்ணமி தினமான இன்று ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாைதயை வலம் வந்து வழிபாடு செய்தனர்.

    சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். நாளை (6-ந் தேதி) சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்கார லீலை நடைபெறுகிறது.

    இதில் சுப்பிரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 7-ந்தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 8-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருள பெரிய தேரோட்டம் நடைபெறும். தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கிரிவலப் பாதைகளில் சுற்றி வரும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×