search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவர் ஓவியம்"

    • வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    • இளைஞர்கள், மாடுபிடி வீரர்களாக மாறி பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளால் சில கிராமங்களில் இதுபோன்ற விளையாட்டுகள் நடத்தப்படுவது குறைந்து வருகிறது. இருந்தபோதும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் ஆர்வம் குறையவில்லை. ஏராளமானோர் இதுபோன்ற காளைகளை வளர்த்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றி வாகை சூடி வருகின்றனர்.

    ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதுபோன்ற காளை வளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு செலுத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் இந்த கிராமத்தில் ஏறு தழுவுதல் என்ற நிகழ்ச்சியும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால் இது போன்ற விளையாட்டுகள் தற்போது குறைந்து வருவது பழங்கால மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை தற்கால இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்குள்ள கோவில் மற்றும் முக்கிய இடங்களில் சுவர் ஓவியமாக வரைந்துள்ளனர்.

    குறிப்பாக தாத்தையன் கோவிலில் ஏறு தழுவுதல் நிகழ்ச்சி தொடர்பான சுவர் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இது குறித்த வரலாறுகளை இப்பகுதி மக்கள் இளைஞர்களுக்கு எடுத்து கூறி காளைகள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுவதின் அவசியம் குறித்தும் எடுத்து கூறி வருகின்றனர்.

    இதனால் இளைஞர்கள், மாடுபிடி வீரர்களாக மாறி பல்வேறு ஊர்களுக்கு சென்று காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு தற்போது அரசின் கெடுபிடிகளால் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையிலும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டும், மாடுபிடி வீரர்களையும் உருவாக்குவதில் இந்த கிராமம் முன் உதாரணமாக விளங்கி வருகிறது.

    • இளையான்குடி பேரூராட்சியில் விழிப்புணர்வு சுவர் ஓவியம் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
    • பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் அமைந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இளையான்குடி பேரூராட்சி உள்ளது. தற்போது பேரூராட்சி அலுவலகம் அருகே குழந்தைகளுக்காக சுற்றுச்சூழல் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அருகில் கிழக்கு பகுதிகளில் உள்ள பெரிய ஊரணி சீரமைக்கப்பட்டு தற்போது பெய்தமழையால் நிரம்பி ரம்மியமாக காணப்படுகிறது.

    இவற்றை பாதுகாக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று மழைநீரின் அவசியம் பற்றியும், முழுசுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டியும், பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவர் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.

    இதற்கான முயற்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முழுசுகாதாரத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களுடன் செய்து வரும் பிரசாரம் பொதுமக்களிடேயே பாராட்டை பெற்று இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

    • மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் வருவதற்கு சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது.
    • இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்குட்பட்ட பழனியாண்டவர் நகர் நகரில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது.

    மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதற்கும் பள்ளி வருவதற்கு தயங்காமல் இருப்பதற்கும் சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது. மாணவர்களே தங்கள் முயற்சியால் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் இந்த சுவர் ஓவியங்களை வரைந்து உள்ளனர். இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஓவியம் வரைவதால் மாணவர்கள் மனநிலையும் ஒருநிலைப்படும். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் இரா. சண்முகப்பிரியா தெரிவித்தார்.

    மேலும் பெற்றோர்கள் ,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • மாணவரின் சுவர் ஓவியத்தை கல்லூரி நிர்வாகம் லிம்கா சாதனை புத்தக குழுவுக்கு அனுப்பி வைத்தது.
    • தற்போது மாணவர் சஞ்சயின் ஓவியத்தை மிகப்பெரிய சுவர் ஓவியமாக அங்கீகரித்துள்ளது லிம்கா.

    திருப்பூர்:

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் - டீ கல்லூரியில் காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பேஷன் துறையில் படிக்கும் மாணவர் சஞ்சய்குமார். இவர் கடந்த 2020 ஜூன் மாதம் தொடர்ந்து 25 நாட்கள் முயற்சி செய்து 504 சதுர அடியில் அப்ஸ்ட்ராக்ட் பெயின்டிங் எனப்படும் புதிர் ஓவியம் தீட்டினார். பிரபல ஓவியர்கள் ரவிவர்மா, பிக்காசோ, உலக வரைபடம், பிரபல இசை வல்லுனர் பீட்டோ உருவம் பொறித்த ஆக்டோபஸ், பேஷன் துறை முன்னோடியான அலெக்சாண்டர் மெக்குயின் படங்களை சுவரில் தத்ரூப ஓவியமாக வரைந்தார்.

    மாணவரின் இந்த சுவர் ஓவியத்தை கல்லூரி நிர்வாகம் லிம்கா சாதனை புத்தக குழுவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது மாணவர் சஞ்சயின் ஓவியத்தை மிகப்பெரிய சுவர் ஓவியமாக அங்கீகரித்துள்ளது லிம்கா. மேலும் இந்த ஓவியம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் லிம்கா தரப்பில் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சாதனை ஓவியம் தீட்டிய மாணவரை நிப்ட் -டீ கல்லூரி தலைவர் மோகன், முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம், இணை செயலாளர்கள் விஜயகுமார், சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் பாராட்டினர்.

    ×