search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களின் பாராட்டை பெற்ற விழிப்புணர்வு சுவர் ஓவியம்
    X

    பொதுமக்களின் பாராட்டை பெற்ற விழிப்புணர்வு சுவர் ஓவியம்

    • இளையான்குடி பேரூராட்சியில் விழிப்புணர்வு சுவர் ஓவியம் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
    • பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் அமைந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இளையான்குடி பேரூராட்சி உள்ளது. தற்போது பேரூராட்சி அலுவலகம் அருகே குழந்தைகளுக்காக சுற்றுச்சூழல் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அருகில் கிழக்கு பகுதிகளில் உள்ள பெரிய ஊரணி சீரமைக்கப்பட்டு தற்போது பெய்தமழையால் நிரம்பி ரம்மியமாக காணப்படுகிறது.

    இவற்றை பாதுகாக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று மழைநீரின் அவசியம் பற்றியும், முழுசுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டியும், பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவர் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.

    இதற்கான முயற்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முழுசுகாதாரத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களுடன் செய்து வரும் பிரசாரம் பொதுமக்களிடேயே பாராட்டை பெற்று இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

    Next Story
    ×