search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றிய கரடி"

    • கரடி சுற்றித்திரிந்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
    • கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பெரியாா் நகா் குடியிருப்பு பகுதியில் ஒற்றை கரடி அதிகாலை சுற்றித்திரிந்தது. இந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

    • தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
    • கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நீலகிரி

    அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவும் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்துள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோயாளிகள் கூச்சலிட்டதால் வனப்பகுதிக்குள் சென்றது.
    • மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பிரிவு பகுதியில் இரவு நேரத்தில் வெளியே இருந்த நாய்கள் குரைத்தபடியே இருந்தன.

    அப்போது நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது கரடி ஒன்று ஒய்யாரமாக மருத்துவமனைக்குள் நடமாடி கொண்டிருந்தது.இதை பார்த்ததும் பொதுமக்களும், நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரமாக நடமாடி கொண்டிருந்த கரடி, பின்னர் நோயாளிகள் கூச்சலிட்டதால் வனப்பகுதிக்குள் சென்றது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கரடிகள், நடமாடி வருவதால் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×