என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A bear roamed"
- நோயாளிகள் கூச்சலிட்டதால் வனப்பகுதிக்குள் சென்றது.
- மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பிரிவு பகுதியில் இரவு நேரத்தில் வெளியே இருந்த நாய்கள் குரைத்தபடியே இருந்தன.
அப்போது நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது கரடி ஒன்று ஒய்யாரமாக மருத்துவமனைக்குள் நடமாடி கொண்டிருந்தது.இதை பார்த்ததும் பொதுமக்களும், நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரமாக நடமாடி கொண்டிருந்த கரடி, பின்னர் நோயாளிகள் கூச்சலிட்டதால் வனப்பகுதிக்குள் சென்றது.
கடந்த சில நாட்களாக கோத்தகிரி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கரடிகள், நடமாடி வருவதால் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்