search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் குடியிருப்பில் சுற்றிய கரடி
    X

    கோத்தகிரியில் குடியிருப்பில் சுற்றிய கரடி

    • கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்துள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×