search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A bear roaming"

    • கரடி சுற்றித்திரிந்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
    • கரடி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பெரியாா் நகா் குடியிருப்பு பகுதியில் ஒற்றை கரடி அதிகாலை சுற்றித்திரிந்தது. இந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

    • உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களை நோக்கி வருகின்றன.
    • கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகளாக காணப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அவ்வப்போது தொடர்ந்து வனங்களை விட்டு வெளியே நகர்புறங்களை நோக்கி வருகின்றன.

    நேற்று இரவு கோத்தகிரி காமராஜர் சதுக்க பகுதியில் ஒற்றை கரடி சுற்றியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகப்படியாக கரடிகள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். எனவே கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×