என் மலர்
நீங்கள் தேடியது "சு.வெங்கடேசன்"
- என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
- அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்
அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரியை 25%-லிருந்து 18% ஆக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக டிரம்ப் கூறிவந்தவாறே, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதித்துள்ளது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
மேலும் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விமானங்கள் உட்பட சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும், வர்த்தகத் தடைகளை நீக்கவும் இந்தியா உடன்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
"பிரதமர் மோடியுடன் உரையாடியதாகவும் பிரதமர் மோடி சில வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். என்னென்ன முடிவுகளுக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்பது நாட்டு மக்களுக்கும் தெரியாது, நாடாளுமன்றத்திற்கும் தெரியாது.
அமெரிக்க அரசின் வேளாண்துறை அமைச்சர் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்கிறார். அப்படியென்றால் என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது.
- உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே எடுத்துக்காட்டு
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
"வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.
தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" புத்தகத்தின் வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் போராடியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே
எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.
ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார்.
- பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.
- இந்த நாளில் தேர்வு நடத்துவது மாணவர்களின் கலாச்சார உரிமையைப் பறிப்பதாகும்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான (VSSC) தேர்வுகள் பொங்கல் திருநாளான ஜன;15 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை உடனடியாக மாற்றச்சொல்லி மத்திய அமைச்சருக்கும், இஸ்ரோவின் தலைவருக்கும் சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான (விளம்பர எண்கள்: 331, 332, 335) கணினி வழித் தேர்வை (CBT) வரும் 2026 ஜனவரி 15 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
ஜனவரி 15 என்பது தமிழகத்தின் மிக முக்கியப் திருவிழாவான பொங்கல் திருநாளாகும். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்குப் பின்வரும் காரணங்களால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்:
1. போக்குவரத்துத் தட்டுப்பாடு: பொங்கல் திருவிழா காலத்தில் தமிழகம் மற்றும் அண்டை
மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து மிகக் கடுமையான நெரிசலைக் கொண்டிருக்கும். இதனால் மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையங்களை அடைவது சாத்தியமற்றது.
2. கலாச்சார உணர்வு: பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். இந்த நாளில் தேர்வு நடத்துவது மாணவர்களின் கலாச்சார உரிமையைப் பறிப்பதாகும்.
3. முரண்பாடான நடைமுறை: தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் (IPRC) பொங்கலுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், மற்றொரு மையமான வி.எஸ்.எஸ்.சி தேர்வை அறிவித்திருப்பது நிர்வாக முரண்பாட்டைக் காட்டுகிறது.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு தேர்வுத் தேதிகளை அமைப்பது வழக்கம். எனவே, தமிழக மாணவர்களின் நலன் மற்றும் நியாயமான கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 15-ல் நடைபெறவுள்ள இத்தேர்வை மற்றொரு தேதிக்குத் தள்ளி வைக்க உடனடியாக ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் மேலான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது
திருவண்ணாமலை, ஆறுபடை வீடுகள் உள்பட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு.
இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம்." என்று கூறியுள்ளார்.
- பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி.
- ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்படுகிறது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில், இன்று (நவ.25) ரயில்வேதுறை ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி சு. வெங்கடேசன் கலந்துகொண்டநிலையில், தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சி, பொதுமக்கள் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம் என தலைப்பிட்டு, "2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ. 31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ. 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் முன்வைத்த கோரிக்கைகளையும் அறிக்கை வடிவில் பதிவிட்டுள்ளார்.
- பாராளுமன்ற விவாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசினார்கள்.
- மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டுவந்து அமர்த்தியுள்ளது என்றார்.
சென்னை:
மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டச் சொன்னோம். அரசு அதனை செய்யவில்லை. வழக்கம்போல் கூடுகிற மழைக்கால கூட்டத்தொடரிலும் விவாதப் பொருளில் அது சேர்க்கப்படவில்லை.
எதிர்க்கட்சிகளின் தீவிரமான போராட்டத்திற்கு பின்பே "பஹல்காம் தீவிரவாத தாக்குதல்-ஆபரேஷன் சிந்தூர்" குறித்து விவாதம் நடத்த அரசு ஏற்றுக்கொண்டது.
அந்த விவாதத்தில் கூட ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே அமைச்சர்கள் பேசினார்கள். பஹல்காம் தாக்குதல், அதில் உயிரிழந்தவர்கள், பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எல்லையோர மக்கள் குறித்து பா.ஜ.க. அரசு ஒரு வார்த்தை பேசவில்லை.
இந்திய ராணுவத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்க வேண்டுமோ அப்படிப் பயன்படுத்தவில்லை என்று நாங்கள் குற்றம்சாட்டினோம். தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் அறிவித்ததைப் பற்றி கேள்வி எழுப்பினோம். ஆனால் அது பற்றி எந்த பதிலும் சொல்லவில்லை.
பாகிஸ்தானுக்குள் 100 கிலோமீட்டர் நுழைந்து தாக்குதல் தொடுக்கப்பட்டதாக சொன்னது அரசு. அது சார்ந்த அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல பிரதமரால் மாநிலங்களவைக்கு வந்து சேர முடியவில்லை.
தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரைத் தனது விளம்பர வெறிக்காக மட்டுமே பயன்படுத்தி வரும் அரசு, இன்று மேலும் ஒரு படி கீழிறங்கி மூத்த ராணுவ அதிகாரிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளது.
எப்படித் தாக்குதல் நடந்தது? தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் யார்? எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்? பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? என நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை பா.ஜ.க.வால் பதிலளிக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார்.
- தமிழ்நாடு தேர்வர்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு கடும் கண்டனம்.
- நெல்லை, கோவை, வேலூரில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை.
மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்கு மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) பொறுப்பற்ற நடவடிக்கை. நெல்லை, கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை. மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெருநகரமான சென்னையில் ஒரே ஒரு தேர்வு மையம். தமிழ்நாட்டு தேர்வர்களை விடாது வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் பல அரசுத் துறைகள், அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள 2,423 காலியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர எண். Phase-XIII/2025/Selection Posts ஐ வெளியிட்டது. ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் ஜூன் 23, 2025 (2300 மணி நேரம் வரை) என்று தரப்பட்டிருந்தது. கணினி அடிப்படையிலான தேர்வுக்கான தேதிகளும் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 04, 2025 வரையில் நடக்கும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தேதியில் தேர்வு தொடங்கியது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். ஆனால் தேர்வு நடத்தும் முறை நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களை நடுநடுங்கச் செய்ய வைத்துள்ளது. பல்வேறு இடங்களில் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற விண்ணப்பதாரர்கள் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
1. விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்கள் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தன. நுழைவுச் சீட்டுகளை ஜூலை 21, 2025 அன்றுதான் வெளியிட்டார்கள். மேலும், இந்த வெளியீடு கூட அனைத்து நாட்களுக்குமானதாக இல்லை. தேர்வுக்கு குறைந்தது நான்கு நாட்களுக்கு முன்புதான் நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதாவது, ஆகஸ்ட் 1, 2025 அன்று எழுதவிருக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
2. தேர்வு மையத்திற்கு 100 கி.மீ.க்கு மேல் பயணம் செய்த பிறகு, பல்வேறு மையங்களில், தேர்வுகள் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக வாயில்களில் அறிவிப்பைக் கண்டு விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு மையத்தில், அறிவிப்புகள் ஒவ்வொன்றாக ஒட்டப்பட்டபோது அது நகைப்புக்குரியதாக மாறியது. இறுதியாக, ஜூலை 24, 2025 முதல் ஜூலை 26, 2025 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இந்த நிச்சயமற்ற தன்மை தேர்வர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் தேர்வுகளை சந்திக்க உள்ளவர்கள் பலர் தேர்வு மையங்களுக்கு பயணிக்கத் தயங்குவதால் நேரம் மற்றும் சக்தி வீணாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
3. விளம்பரத்தில் போதிய எண்ணிக்கையிலான மையங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த மையங்கள் பலவற்றில் தேர்வு நடத்தப்படவில்லை என்பது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற முக்கியமான மையங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஒரு பெருநகரமான சென்னையில் கூட, ஒரே ஒரு தேர்வு மையம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக போதுமானதாக இல்லை. மையங்கள் வெகு தொலைவில் இருப்பதால் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிலர் தேர்வில் கலந்து கொள்ள மூன்று நாட்கள் செலவிட வேண்டியிருக்கிறது.
4. தேர்வு அறைகளுக்குள், கணினிகள் சரியாக வேலை செய்யவில்லை. சில தேர்வர்கள் விடை எழுதும்போது தங்கள் கணினிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். அவர்கள் வேறொரு கணினியில் அமர்த்தப்பட்டனர். பல கணினிகளில் மவுஸ் வேலை செய்யவில்லை. தேர்வு அறைகள் பெரும்பாலும் கணினி ஆய்வகங்களாக உள்ளதால் மூடப்பட்டதாகவே இருக்கும். சில தேர்வு அறைகளில், குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை. இந்தியாவின் வட பகுதி மாநிலங்களில் இது கோடைக்காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. நுழையும் இடத்தில் தேவைப்படும் நடைமுறை மற்றும் தேர்வு மையத்திற்குள் செய்ய வேண்டியவை ஒழுங்கற்ற முறையில் கையாளப்பட்டுள்ளன. சில அரங்குகளில் கதவு மூடப்பட வேண்டிய நேரம் என்று அறிவித்திருந்த நேரமான காலை 9 மணிக்குப் பிறகுதான் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்வு அரங்கிற்குள் அலைபேசிகள் தடைசெய்யப்பட்டவையாகும். ஆனால், தேர்வு அரங்கின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியில் பகிரப்பட்டுள்ளன. மேலும் சிலர் தாங்கள் தேர்வு எழுதும் கணினியின் திரையைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
6. தேர்வுகளை நடத்துவதற்குப் பொறுப்பேற்றுள்ள நிறுவனம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை நடத்தி வந்தது, இப்போது எடுக்விட்டி(Eduquity) என்ற புதிய நிறுவனத்திற்கு இந்தப் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தைச் செய்யும் அதே வேளையில், தேர்வுகளை சீராக நடத்துவதை உறுதி செய்வதில் பணியாளர் தேர்வு ஆணையம் தோல்வியடைந்துள்ளது, இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள வேலையற்ற இளைஞர்கள் தேவையற்ற சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர்.
இதன் மூலம் தேர்வர்கள் நலன் சார்பாக முன்வைக்கும் கோரிக்கைகள் என்னவென்றால்,
1. தேர்வுகள் மீண்டும் திட்டமிடப்படுவதால், எஞ்சியுள்ள தேர்வுகள் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். "நிர்வாகக் காரணங்கள்" அல்லது "தொழில்நுட்பக் கோளாறுகள்" போன்றவற்றைச் சொல்வது எதற்கும் பயனளிக்காது.
2. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மையங்களில் இருந்தும், தேர்வர்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
3. பெரிய நகரங்களில், அதாவது சென்னையில் உள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
4. எதிர்காலத்திலாவது நுழைவுச் சீட்டுகள் முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும்,
5. தேர்வுகளை நடத்தும் பணியை ஒதுக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே, மாற்றத்தின் போது ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க ஒரு தெளிவான செயல்முறையை வகுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இன்று தொடங்கிய இந்தத் கூட்டத்தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ம் தேதி வரை பாராளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதேபோல, எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி இன்று மக்களவையில் விவாதிக்க மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஒத்திவைப்புத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
- கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மையை மாற்றுவது குற்றம்
- திருக்குறளையே மாற்றுகிறோம், நீ என்ன ஒரு அறிக்கையை மாற்ற மறுக்கிறாய் என ஆளுநர் மாளிகை ஆச்சரியம்!
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.ஒய். சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மையை மாற்றுவது குற்றம். அந்த குற்றத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்" என்று அமர்நாத் இராமகிருஷ்ணன் சொல்கிறார். நாங்கள் திருக்குறளையே மாற்றுகிறோம், நீ என்ன ஒரு அறிக்கையை மாற்ற மறுக்கிறாய் என ஆளுநர் மாளிகை ஆச்சரியம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய அரசு அறிவித்திருந்தது.
- உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் மராட்டிய அரசு பணிந்துள்ளது..
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், "மூன்றாம் மொழியாக இந்தியை திணிக்கும் முடிவு ரத்து. மீண்டும் பணிந்தது மராட்டிய அரசு. இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றிபெறாது" என்று தெரிவித்துள்ளார்
- ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை” என்கிறார் அமித்ஷா.
- பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல்.
மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது. . ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும்" என்று விமர்சனம் செய்திருந்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில், "ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலை" என்கிறார் அமித்ஷா.
பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல். அதனை ஆயிரம் ஆண்டு என சுருக்குவதில் தான் சனாதனத்தின் சதி இருக்கிறது.
சமஸ்கிருதத்தை பல்லாயிரம் ஆண்டு என்று சொல்லிக்கொண்டே தமிழை ஆயிரம் ஆண்டுக்குள் அடக்குவது தான் கீழடி துவங்கி திருப்பரங்குன்றம் வரை அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல்.
- ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி.
- ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி.
மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே மிருதங் மற்றும் சந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கேற்ப பெயரிடப்பட்டு வந்தன.
ஆனால் இந்த முறை, கணிதப் புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு கணித பிரகாஷ் என்ற இந்தி பெயர் வழங்கப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், NCERT-யின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், NCERT புத்தகங்களுக்கு இந்தியில் பெயரிடப்பட்டதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?" என்று பதிவிட்டுள்ளார்.






