என் மலர்
நீங்கள் தேடியது "தொல்லியல் ஆய்வாளர்கள்"
- கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மையை மாற்றுவது குற்றம்
- திருக்குறளையே மாற்றுகிறோம், நீ என்ன ஒரு அறிக்கையை மாற்ற மறுக்கிறாய் என ஆளுநர் மாளிகை ஆச்சரியம்!
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.ஒய். சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மையை மாற்றுவது குற்றம். அந்த குற்றத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன்" என்று அமர்நாத் இராமகிருஷ்ணன் சொல்கிறார். நாங்கள் திருக்குறளையே மாற்றுகிறோம், நீ என்ன ஒரு அறிக்கையை மாற்ற மறுக்கிறாய் என ஆளுநர் மாளிகை ஆச்சரியம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன்
- ஆய்வின் அடிப்படையில் கீழடி நாகரிக காலத்தை கண்டுபிடித்தேன், அனுமானத்தின் அடிப்படையில் அல்ல.
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த அமர்நாத் ராமகிருஷ்ணன், "கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. ஆய்வறிக்கையை சமர்ப்பித்தால் அதில் மீண்டும் திருத்தம் செய்ய கூடாது. 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன். எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன்.
ஆய்வின் அடிப்படையில் கீழடி நாகரிக காலத்தை கண்டுபிடித்தேன், அனுமானத்தின் அடிப்படையில் அல்ல. கீழடி பற்றி அறியாத ஒருவர் எப்படி அங்கு ஒன்றுமில்லை என கூறமுடியும்? அறிக்கையை முதலில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் படித்துப் பார்க்கட்டும். அவர்கள் எப்போதும் சிந்து சமவெளி நாகரிகம், வேத நாகரிகம், 5 மௌரிய மற்றும் ஹர்ஷவர்தன வரலாற்றைப் பற்றியே பேசுகிறார்கள், ஏன் நாட்டின் பிற பகுதிகளை பார்ப்பதில்லை..? சங்ககால வரலாற்றை பற்றி ஒன்றிய அரசு ஏன் ஆய்வு மேற்கொள்ளவில்லை?
கி.மு 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்துகிறது. கீழடி நாகரிகத்தின் தொன்மையை சிதைக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடுவதுபோல் தெரிகிறது" என்று தெரிவித்தார்.
- மத்திய தொல்லியல் துறை கீழடி ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
- கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.
ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையின் இந்த செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில், கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் நுட்பமான விவரங்களுடன் திருத்தி எழுத கேட்டுக்கொள்ளப்படுவதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் துறை கடிதம் எழுதியுள்ளது.
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
கீழடி ஆய்வறிக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்திய தொல்லியல் துறைக்கு வன்மையான கண்டனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழின் கலாச்சார நாகரிகத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அரசு இயந்திரத்தை தமிழர்களுக்கும், தமிழரின் பண்பாட்டிற்கும் எதிராக பயன்படுத்துகிறார்கள்.
சமஸ்கிருதத்திற்குத் தமிழைப் போல பழமையான வரலாற்றுச் சான்றுகள் இல்லாதபோது, தமிழுக்கு இவ்வளவு ஆழமான மற்றும் அதிகாரபூர்வ அங்கீகரிக்கப்பட்ட வரலாறு உள்ளது என்பதை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்.? அதனால்தான் கீழடி அகழ்வாயின் ஆய்வறிக்கையை வெளியிட தாமதப்படுத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மொழி, பண்பாடு, நிதி பகிர்வு, மாநில சுயாட்சி, கல்வி என அனைத்திலும் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கீழடி ஆய்வு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
- ஊரில் காடு, திரடு போன்ற இடங்களில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது.
- அங்கு புதைந்திருந்த தொல் பொருட்கள் சிதைவடைந்த நிலையில் அந்த இடம் முழுக்க பரவி காணப்படுகிறது.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகே பொருநையின் வடகரையில் அமைந்துள்ளது கொங்க ராயக்குறிச்சி. இவ்வூரின் காடு, திரடு போன்ற இடங்களில் தொல் பொருட்கள் கிடைத்து வருகிறது.
எனவே, கொங்க ராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
தொல்லியல் களம்
தற்போது திருச் செந்தூர் சாலை விரிவாக்க பணிக்காக கொங்கராயக்குறிச்சி கிராமம் வழியாக சாலை அமைக்க முதற்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இதனால் ஊரில் உள்ள திரடுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த திரடானது ஊரின் கீழத்தெருவில் அமைந்து ள்ளது. சுமார் 50 அடி உயரம் கொண்ட இந்த திரட்டில் பழமையான திருவாளிப் பெருமாள் மற்றும் சுயம்பு பத்திரகாளி அம்மன் கோவில்கள் உள்ளது. ஒரு காலத்தில் இங்குதான் குடியிருப்புகளை அமைத்து மக்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாலை பணிக்காக அப்பகுதியில் உள்ள வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பி விடுவதற்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கு புதைந்திருந்த தொல் பொருட்கள் சிதைவடைந்த நிலையில் அந்த இடம் முழுக்க பரவி காணப்படுகிறது. மேலும், குவியல் குவியலாக எலும்புகளும் உள்ளது. இது மனிதனின் கால், குறுக்கு, முட்டெலும்பு போன்று உள்ளதால், சாலை அமைக்கும் முன்பு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து நேற்று மாலை மலரில் செய்தி வெளியானது. இதனை அடுத்து ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு பணியில் இயக்குனராகவும் திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனராகவும் உள்ள அருண் ராஜ் உத்தரவின் பேரில், ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய ஆய்வு மாணவர் மணிகண்டன் இதனை நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்த தகவலை மத்திய தொழில்துறை அதிகாரிக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.






