search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவிசி"

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் மத்திய விஜிலன்ஸ் கமிஷனில் (சிவிசி) காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று மனு அளித்துள்ளனர். #Rafale #Congress #CVC
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் - பாஜக இடையே வார்த்தைப்போர் அதிகரித்து வருகிறது. ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய கணக்கு தணிக்கை அமைப்பிடம் (சிஏஜி) கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி மனு அளித்தது.

    இந்நிலையில், மத்திய விஜிலன்ஸ் கமிஷ்னர் கே.வி.சவுத்ரியை இன்று சந்தித்த காங்கிரஸ் குழு, ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படுத்தியதாகவும் மத்திய அரசின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சவுத்திரியிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு தந்தனர். மேலும், இந்த விஷயத்தில் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் பொய்கள் கூறி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த ஷர்மா, கபில் சிபில், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, மனிஷ் திவாரி, விவேக் தன்கா, பர்மோத் திவாரி மற்றும் பிரனாவ் ஜா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்த சந்திப்பில் இருந்துள்ளனர்.
    பல்வேறு முக்கிய வழக்குகளில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுவதாக சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #CBI #CVC
    புதுடெல்லி:

    நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பான சிபிஐயில் தற்போது அதிகார மோதல்கள் ஏற்பட்டுள்ளது. சிறப்பு இயக்குநராக இருக்கும் ராகேஷ் அஸ்தானா, மல்லையாவின் முறைகேடு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு, லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு ஆகியவற்றை விசாரித்து வருகிறார். 

    இதில், லாலு தொடர்பான வழக்கில் சோதனைகளை இயக்குநர் அலோக் வர்மா நிறுத்தியதாக அஸ்தானா முக்கியமாகக் குற்றம்சாட்டியிருந்தார். முதலில் இந்த குற்றச்சாட்டை அவர் மத்திய அரசிடம் தெரிவித்தார். பின்னர் மத்திய அரசு அதனை சிவிசி (மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்) விசாரிக்க உத்தரவிட்டது. 

    இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விவரங்களைக் கேட்டு சிபிஐ-க்கு சிவிசி கடிதம் எழுதியது. சிபிஐ விசாரித்து வரும் வழக்குகளில் 6 வழக்குகளின் விவரத்தை சிவிசி கேட்டுள்ளது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அலோக் வர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இயக்குநருக்கும், சிறப்பு இயக்குநருக்கும் இடையே ஓராண்டாக மோதல் போக்கு நீடித்து வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், விசாரணைகளில் குறுக்கீடு செய்வதாக அலோக் வர்மா மீது அஸ்தானா தெரிவித்துள்ள புகாருக்கு சிபிஐ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை திரட்டி வரும் அதிகாரிகளை மிரட்டவே இதுபோன்ற புகாரை அஸ்தானா தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

    சிபிஐயில் வெடித்துள்ள இந்த அதிகார மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×