search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CVC"

    பதவி நீக்கத்தை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #CBI #CVC #AlokVerma
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்ட நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நீதிபதி பட்நாயக் மேற்பார்வையில் மத்திய ஊழல் தடுப்பு குழு ஒன்றை நியமித்து கடந்த 26-10-2018 சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

    விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவின் வழக்கறிஞர் துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வு மறுவிசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.



    இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விசாரணை அறிக்கையின் நகலை சீலிட்ட உறையில் வைத்து அலோக் வர்மாவிடம் வழங்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

    இதுவரை பெறப்பட்ட விசாரணை அறிக்கையில் காணப்படும் சில விபரங்கள் திருப்திகரமாகவும், சில அதிருப்தியான வகையிலும் காணப்படுவதால் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த அறிக்கை தொடர்பான தனது பதிலை தெரிவிக்குமாறு அலோக் வர்மாவை அறிவுறுத்தி, மறுவிசாரணையை ஒத்திவைத்தனர். அலோக் வர்மா தனது பதிலை எழுத்துப்பூர்வமாக நேற்று தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ‘உங்களுக்கு எல்லாம் விசாரணையே தேவை இல்லை என்று கருதுகிறோம்’ என்று கடுமையான கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இவ்வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CBI #CVC #AlokVerma
    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் மத்திய விஜிலன்ஸ் கமிஷனில் (சிவிசி) காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று மனு அளித்துள்ளனர். #Rafale #Congress #CVC
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் - பாஜக இடையே வார்த்தைப்போர் அதிகரித்து வருகிறது. ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய கணக்கு தணிக்கை அமைப்பிடம் (சிஏஜி) கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி மனு அளித்தது.

    இந்நிலையில், மத்திய விஜிலன்ஸ் கமிஷ்னர் கே.வி.சவுத்ரியை இன்று சந்தித்த காங்கிரஸ் குழு, ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் ஏற்படுத்தியதாகவும் மத்திய அரசின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சவுத்திரியிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு தந்தனர். மேலும், இந்த விஷயத்தில் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் பொய்கள் கூறி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த ஷர்மா, கபில் சிபில், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, மனிஷ் திவாரி, விவேக் தன்கா, பர்மோத் திவாரி மற்றும் பிரனாவ் ஜா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்த சந்திப்பில் இருந்துள்ளனர்.
    பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் சரத்குமார் மத்திய விழிப்புணர்வு ஆணையராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #ExNIAchief #SharadKumar #CVCcommissioner
    புதுடெல்லி:

    ஊழல் தடுப்பு பிரிவின் பரிந்துரையின் உருவாக்கப்பட்ட மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கு தேசிய அளவில் மத்திய விழிப்புணர்வு ஆணையராக ஒருவரும், மேலும் இரு ஆணையர்களும் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய விழிப்புணர்வு ஆணையர் பதவி கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவர் சரத்குமார் அந்த இடத்தில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி,எஸ். அதிகாரியான சரத்குமார் தேசிய புலனாய்வு முகமையின் முன்னாள் தலைவராக சுமார் நான்காண்டு காலம் பணியாற்றியுள்ளார். தற்போது 62 வயதாகும் இவர் வரும் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மத்திய விழிப்புணர்வு ஆணையராக நீடிப்பார். #ExNIAchief  #SharadKumar  #CVCcommissioner
    ×