search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவபூஜை செய்யும் முறை"

    • உபவாசம் இருந்து இரவு முழுவதும் சிவ பூஜை செய்யலாம்.
    • சிவாலயங்களுக்குச் சென்று சிவபூஜையை தரிசனம் செய்யலாம்.

    சிவனின் ராத்திரி= சிவராத்திரி, சிவனுக்கான இரவு, ஆகவே, அன்று (8-ந்தேதி) சூரியன் மறையும் நேரம் முதல் மறுநாள் (9-ந்தேதி) சூரிய உதயம் வரையுள்ள காலமே மகா சிவராத்திரி காலம் எனப்படும். மகா சிவராத்திரி தினத்தன்று கோடி சூர்ய பிரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மகாலிங்கமாக முதன் முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம்.

    * விண்ணும் மண்ணும் நிறைந்து ஜோதி ஒளிப்பிழம்பாக நின்ற சிவ பெருமானின் அடிமுடி காண முடியாமல் பிரம்மன் திகைத்த நாள்

    * சிவபஞ்சாட்சர மகாமந்திர ஜபத்தை முறையாக குருவின் மூலம் உபதேசம் செய்து கொள்ள- சிவபஞ்சாட்சர மந்திரத்தை ஜபம் ஹோமம் செய்து சித்தி செய்ய மகா சிவராத்திரி தினம் சிறந்த நாள். மனிதராகப் பிறந்த அனைவரும் வருகிற சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

    விரதம் என்பது 1. உபவாசம், (சாப்பிடாது இருத்தல்) 2. பூஜை, 3. ஜாகரணம் (தூங்காது இருத்தல்) ஆகிய மூன்று செயல்களுடன் கூடியது.

    சிவராத்திரி அன்று உணவு உட்கொள்ளாமல் (சக்தியற்றவர்கள்) பால், பழம் முதலியவற்றை மட்டும் சாப்பிட்டு விட்டு) உபவாசம் இருப்பதாலும், முயற்சியுடன் பகலிலும், இரவிலும் துாங்காமல் கண்விழிப்பதாலும் சிவலிங்கத்தை பூஜை செய்வதாலும் அழிவற்ற, குறைவற்ற அனைத்து போகங்களையும் அனுபவிப்பதுடன் இறுதியில் சிவலோகமும் கிட்டும் என்பது ஐதீகம். ஆகவே வருகிற 8-ந் தேதி இயன்றவர்கள் உபவாசம் இருந்து இரவு முழுவதும் சிவ பூஜை செய்யலாம். அதன்பிறகு அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்ற அங்கு நடைபெறும் சிவபூஜையை தரிசனம் செய்யலாம்.

    அன்று இரவு முழுவதும் தனது வீட்டு பூஜையறையில் அல்லது அருகில் உள்ள சிவன் கோவிலில் மண்ணாலான அகல் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு நெய்தீபம் (அகண்ட தீபமாக) ஏற்றி வைக்கலாம்.

    சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

    2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரை தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    3. ஓதிக்கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

    4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

    5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும்.

    7. எருக்க மலர் மாலைகளை பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

    8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏந்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

    9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

    ×