search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்மிஷம்"

    • மதுரையில் கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • குடிபோதையில் இருந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தார்.

    மதுரை

    மதுரையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார்.

    அவர் நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தார். அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தார். அந்தப்பெண் கூச்சல் போடவே வாலிபர் ஆபாசமாக பேசி தப்பினார்.

    இது குறித்து தெற்கு வாசல் போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது இளம் பெண்ணிடம் அந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்வது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் பற்றிய விவரம் தெரிய வந்தது. தனிப்படை போலீசார் நேற்று இரவு நெல்பேட்டைக்குச் சென்று வீட்டில் பதுங்கியிருந்த உமர் பாரூக் என்பவரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பெண் ஊழியரிடம் குடிபோதையில் வம்பு செய்த அந்த வாலிபரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை
    • குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு அஞ்சு கிராமம் புது குடியிருப்பை சேர்ந்த ஆம்ஸ் நல்லதம்பி (வயது 45) என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியர் ஆம்ஸ்நல்லத்தம்பி 7-ம் வகுப்பு மாணவியிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த மாணவி சக ஆசிரியையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வகுப்பறையில் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஆம்ஸ் நல்லதம்பி மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் ஆசிரியர் சில்மிசத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு உள்ள செங்கல் சூளை ஒன்றில் பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் ஒருவர் எட்டிப் பார்த்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் செங்கல்சூலை உரிமையாளரிடம் நடந்த தகவலை கூறியுள்ளார். செங்கல்சூளை உரிமையாளர் இது குறித்துஅந்த வாலிபரிடம் தட்டி கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    அந்த வாலிபரை செங்கல் சூளை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாலிபர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் செங்கல்சூளை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சுப முகூர்த்த தினம் என்பதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம்
    • ஒரு முதியவர், முன் இருக்கையில் இருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது .

    இன்று காலையில் பஸ் நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. சுப முகூர்த்த தினம் என்பதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து கொல்லங்கோடு செல்வத ற்காக அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.பஸ்ஸில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.அதில் ஒரு முதியவர், முன் இருக்கையில் இருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பஸ் செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பொறுமை இழந்த பெண் ஆத்திரத்தில் தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி முதியவரை சரமாரியாக தாக்கினார்.

    இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பஸ் கண்டக்டர் அந்த முதியவரை எச்சரித்தார்.பின்னர் முதியவர் பஸ்சின் பின் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.

    பஸ்சில் எதுவும் நடக்கா தது போல் முதியவர் பின் இருக்கையில் சென்று அமர்ந்து இருந்ததைப் பார்த்த சக பயணிகள் அவரை வசை பாடினார்கள்.

    ×