search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
    X

    கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

    • மதுரையில் கல்லூரி பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • குடிபோதையில் இருந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தார்.

    மதுரை

    மதுரையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 23 வயது இளம்பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார்.

    அவர் நேற்று இரவு கல்லூரியில் இருந்து வெளியே வந்தார். அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்தார். அந்தப்பெண் கூச்சல் போடவே வாலிபர் ஆபாசமாக பேசி தப்பினார்.

    இது குறித்து தெற்கு வாசல் போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது இளம் பெண்ணிடம் அந்த வாலிபர் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்வது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் பற்றிய விவரம் தெரிய வந்தது. தனிப்படை போலீசார் நேற்று இரவு நெல்பேட்டைக்குச் சென்று வீட்டில் பதுங்கியிருந்த உமர் பாரூக் என்பவரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பெண் ஊழியரிடம் குடிபோதையில் வம்பு செய்த அந்த வாலிபரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×