search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பஸ்சில் சில்மிஷம் செய்த முதியவரை செருப்பால் தாக்கிய இளம்பெண்
    X

    நாகர்கோவிலில் பஸ்சில் சில்மிஷம் செய்த முதியவரை செருப்பால் தாக்கிய இளம்பெண்

    • சுப முகூர்த்த தினம் என்பதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம்
    • ஒரு முதியவர், முன் இருக்கையில் இருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது .

    இன்று காலையில் பஸ் நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. சுப முகூர்த்த தினம் என்பதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து கொல்லங்கோடு செல்வத ற்காக அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.பஸ்ஸில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.அதில் ஒரு முதியவர், முன் இருக்கையில் இருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பஸ் செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பொறுமை இழந்த பெண் ஆத்திரத்தில் தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி முதியவரை சரமாரியாக தாக்கினார்.

    இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பஸ் கண்டக்டர் அந்த முதியவரை எச்சரித்தார்.பின்னர் முதியவர் பஸ்சின் பின் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.

    பஸ்சில் எதுவும் நடக்கா தது போல் முதியவர் பின் இருக்கையில் சென்று அமர்ந்து இருந்ததைப் பார்த்த சக பயணிகள் அவரை வசை பாடினார்கள்.

    Next Story
    ×