search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை வார்டன்"

    • நாளுக்கு நாள் வார்டனின் தொல்லை அதிமானதால் கைதியின் மனைவி சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உறவினர்கள் சட்டவிதிகளின்படி வந்து பார்த்து செல்வார்கள்.

    அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த திருட்டு வழக்கு கைதியை அவரது மனைவி சந்தித்து பேசினார். அப்போது கைதியை சந்திக்க ஜெயில் வார்டன் ஒருவர் அந்த பெண்ணுக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய அந்த வார்டன் அடிக்கடி போன் செய்து பேசினார். மேலும் செல்போனில் ஆபாச வீடியோக்களை அனுப்பிய அந்த வார்டன் வீடியோ காலில் சென்றும் தவறாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நாளுக்கு நாள் வார்டனின் தொல்லை அதிமானதால் கைதியின் மனைவி சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் மற்றும் அதிகாரிகள் அந்த வார்டனிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட அதிகாரிகள் வார்டன் அனுப்பிய வீடியோக்களை அனுப்புமாறு கூறினர். ஆனால் அந்த பெண் அந்த வீடியோக்களை அழித்து விட்டதாக கூறினார்.

    இதையடுத்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார். பின்னர் 2 பேரின் செல்போன்களும் கைப்பற்றப்பட்டு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதில் எவ்வளவு நேரம் வார்டன் அந்த பெண்ணிடம் பேசினார், என்னென்ன பேசினார், எத்தனை ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் அதனை அறிக்கையாக தயாரித்து சிறை சூப்பிரண்டிடம் வழங்க உள்ளனர் . அதனை வைத்து நாளைக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர்.
    • சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் சிக்கனூரில் உள்ள அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக சிறுமி உள்பட 3 குழந்தைகளையும் பாட்டி வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி சொந்த ஊருக்கு கணவன், மனைவியும் வந்தனர். அப்போது தாயிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.

    உடனே அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தார்.

    இதில் அதே ஊரைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. லெனின்குமார் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியை சந்திக்க ஹரிகிருஷ்ணன் பரோலில் சென்றார்.
    • சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார்.

    சேலம்:

    சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது52). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், பல்வேறு சிறைகளில் மாறி மாறி 12 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார்.

    இதில், அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியை சந்திக்க, ஹரிகிருஷ்ணன், 2022 ஜூன் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பரோலில் சென்றார்.

    பின்னர், அவர் சேலம் திரும்பியபோது, சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார். இதற்கு, சிறை வார்டன் ராமகிருஷ்ணன் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அப்போதைய சிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார், துறை நடவடிக்கை மேற்கொண்டு வார்டனை, சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பின் கோவை கூடுதல் சிறை எஸ்.பி. சதீஷ்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில், வார்டன் மோட்டார் சைக்கிளில் ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச் சென்று அஸ்தம்பட்டி சந்திப்பில் இறக்கி விட்டு, அவரை தப்பிக்கவிட்டார் என்பது உறுதியானது.

    அதன்படி எஸ்.பி. தமிழ்செல்வன், வார்டனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    ×