search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச வீடியோ"

    • நாளுக்கு நாள் வார்டனின் தொல்லை அதிமானதால் கைதியின் மனைவி சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உறவினர்கள் சட்டவிதிகளின்படி வந்து பார்த்து செல்வார்கள்.

    அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த திருட்டு வழக்கு கைதியை அவரது மனைவி சந்தித்து பேசினார். அப்போது கைதியை சந்திக்க ஜெயில் வார்டன் ஒருவர் அந்த பெண்ணுக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய அந்த வார்டன் அடிக்கடி போன் செய்து பேசினார். மேலும் செல்போனில் ஆபாச வீடியோக்களை அனுப்பிய அந்த வார்டன் வீடியோ காலில் சென்றும் தவறாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நாளுக்கு நாள் வார்டனின் தொல்லை அதிமானதால் கைதியின் மனைவி சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் மற்றும் அதிகாரிகள் அந்த வார்டனிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட அதிகாரிகள் வார்டன் அனுப்பிய வீடியோக்களை அனுப்புமாறு கூறினர். ஆனால் அந்த பெண் அந்த வீடியோக்களை அழித்து விட்டதாக கூறினார்.

    இதையடுத்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார். பின்னர் 2 பேரின் செல்போன்களும் கைப்பற்றப்பட்டு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதில் எவ்வளவு நேரம் வார்டன் அந்த பெண்ணிடம் பேசினார், என்னென்ன பேசினார், எத்தனை ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் அதனை அறிக்கையாக தயாரித்து சிறை சூப்பிரண்டிடம் வழங்க உள்ளனர் . அதனை வைத்து நாளைக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
    • கடந்த 13-ந் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 27 வயதான பாதிரியார் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்துக்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில் அன்பாக பேசிய அவர் நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் பேசி பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார். தன்னிடம் விழுந்த பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்களின் ஆடைகளை கழற்றும்படி கூறி நிர்வாண நிலையில் வீடியோவும் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

    பின்னர் அந்த ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும், தனக்கு நடந்ததை வெளியே கூறினால் அவமானம் ஆகிவிடும் என்பதற்காக அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அவர் இளம்பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் அவர் பேசிய காட்சிகள், உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் என கிளுகிளுப்பூட்டும் பல காட்சிகள் வைரலாகி வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட புகைப்படம், அடுக்கடுக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

    ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் பாதிரியார் தன்னுடைய பணியை ராஜினாமா செய்து விட்டதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு வேறு பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிரியார் மீதான பிடி இறுகுவதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே கடந்த 13-ந் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் பாதிரியார் இளம்பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். அதோடு பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும், பதிவுகளையும் ஒப்படைப்பதாக அவர் கூறினார். ஆனால் அதற்குள் அனைத்து வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிரியாரின் செல்போன் மற்றும் லேப்-டாப்பில் பல்வேறு ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை தெரியவரும்.

    பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட பாதிரியாரின் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில் சம்பந்தப்பட்ட பாதிரியார் அரசியல் கட்சி தலைவர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையே பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், "நான் பாதிரியார் பணியாற்றிய ஆலயத்துக்கு சென்றேன். முதலில் சாதாரணமாக பேசி ஆசி வழங்கினார். பின்னர் தவறான முறையில் என்னை தொட்டு பேச தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட ஆலய பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம். எனினும் அவர் என் தாயாரிடம் எனது செல்போன் நம்பரை வாங்கி பேசினார்.

    ஒரு கட்டத்தில் செய்வதறியாது நானும் பேசினேன். ஆனால் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் பேசினார். வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்தார். என்னை மட்டுமல்லாது பல பெண்களிடம் இவ்வாறாக அவர் நடந்து கொள்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டு எச்சரித்தேன். நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். அதற்கு என்னை மிரட்டினார். எனவே இதுதொடர்பாக பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

    நர்சிங் மாணவி புகாரை தொடர்ந்து பாதிரியாரின் லீலை விவகாரம் வேகம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    ×