search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி மனைவி"

    • நாளுக்கு நாள் வார்டனின் தொல்லை அதிமானதால் கைதியின் மனைவி சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உறவினர்கள் சட்டவிதிகளின்படி வந்து பார்த்து செல்வார்கள்.

    அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த திருட்டு வழக்கு கைதியை அவரது மனைவி சந்தித்து பேசினார். அப்போது கைதியை சந்திக்க ஜெயில் வார்டன் ஒருவர் அந்த பெண்ணுக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய அந்த வார்டன் அடிக்கடி போன் செய்து பேசினார். மேலும் செல்போனில் ஆபாச வீடியோக்களை அனுப்பிய அந்த வார்டன் வீடியோ காலில் சென்றும் தவறாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நாளுக்கு நாள் வார்டனின் தொல்லை அதிமானதால் கைதியின் மனைவி சிறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் மற்றும் அதிகாரிகள் அந்த வார்டனிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட அதிகாரிகள் வார்டன் அனுப்பிய வீடியோக்களை அனுப்புமாறு கூறினர். ஆனால் அந்த பெண் அந்த வீடியோக்களை அழித்து விட்டதாக கூறினார்.

    இதையடுத்து மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க சூப்பிரண்டு வினோத் பரிந்துரை செய்தார். பின்னர் 2 பேரின் செல்போன்களும் கைப்பற்றப்பட்டு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதில் எவ்வளவு நேரம் வார்டன் அந்த பெண்ணிடம் பேசினார், என்னென்ன பேசினார், எத்தனை ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் அதனை அறிக்கையாக தயாரித்து சிறை சூப்பிரண்டிடம் வழங்க உள்ளனர் . அதனை வைத்து நாளைக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    ×