search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு மையம்"

    • மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வீடு வீடாக வழங்கும் பணியில் ரேசன் கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கூட்டுறவுதுறை பதிவாளர் எச்சரித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் வெளிநபர்களால் விண்ணப்பம் வழங்கப்படுவதற்கு அனுமதி இல்லை.

    மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும்.
    • வருகிற 24-ந் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதன் முதற்கட்டமாக சென்னையில் வீடுவீடாக விண்ணப்பம் கொடுக்க தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை முழுமையாக பயன்படுத்த உள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து இவர்கள் வீடு வீடாக விண்ணப்பம் வழங்குவார்கள். பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் 1,417 ரேஷன் கடைகள் உள்ளது. இதனால் மொத்தம் 3,550 மையங்கள் அமைக்க முடிவு செய்து உள்ளோம். வருகிற 24-ந் தேதிக்கு பிறகு இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும்.

    கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்படும். இந்த மையங்களுக்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறினார்.

    • வீடுகளில் குப்பைகள் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
    • இல்லாதவர்கள் எடுத்து செல்லலாம்

    வேலூர்:

    தமிழகத்தில் 'தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர்ப்புறம் 2.0 எனும் திட்டத்தின் கீழ் 'ஆர்ஆர்ஆர்' மையங்கள் நேற்று தொடங்கப்பட்டன.

    அதன்படி, வேலுார் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும், அந் தந்த சுகாதார அலுவலர்கள் தலைமையில், இந்த மையங்கள் தொடங்கப்பட்டன.

    மாநகராட்சி 2வது மண்ட லத்தில், சுகாதார அலுவலர் லுார்துசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாந கராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

    இதுகுறித்து, மாநகர நல அலுவலர் கணேசனிடம் கேட்டபோது கூறியது: அவர் மக்கள் தாங்கள் பயன் படுத்திய பொருட்களை, அவ்வப்போது தங்கள் தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப கழிவுகளாக அப்புறப் படுத்துகின்றனர். இதனால், மாநகரில் கழிவுகள் உற்பத்தி என்பது தினமும் அதிகரித்து வருகிறது. அதேநேரம், இவற்றில் பெரும்பாலா னவை மீண்டும் பயன்ப டுத்தக்கூடியவை. மேலும், ஏழ்மை நிலையில் உள்ள வர்கள், இந்த பொருட்களை வாங்க இயலாத நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையை மாற்றி யமைக்க, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5, மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும்விதமாக, 'தூய்மை பாரதம்' இயக் கத்தின்கீழ், தமிழக அரசால் 'என் வாழ்க்கை-என்சுத்த மான நகரம்' எனும் தலைப் பின் கீழ், மே 20ம் தேதி (நேற்று) முதல் ஜூன் 5ம் தேதி வரை மக்கள் கூடும் இடங்களில் 'ஆர்ஆர்ஆர்' (ரெடியூஸ் தேவையற்ற பொருட்கள் வாங்குவதை குறைத்தல், ரீ யூஸ்- வாங்கியபொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்து தல்,ரீசைக்கிள் மறுசுழற்சி செய்து பயன்ப டுத்துதல்) மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    இதன் முன்னோட்ட மாக, வேலுார் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் 4 மண்டல் அலுவலகங்க ளில் இந்த 'ஆர்ஆர்ஆர் மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இங்கு பலதரப் பட்ட மக்களிடமிருந்தும் சேகரிக்கப்படும் துணிகள். புத்தகங்கள் ஆகியவற்றை தேவைப்படுபவர்கள் எடு த்து பயன்படுத்திக் கொள் ளலாம். அதேபோன்று, மின் சாதன பொருட்களை இ- கழிவு சேகரிப்பாளர்கள் மூலம் எடுத்துச்செல்லப் இவ்வாறு அவர் தெரி பட்டு மறுசுழற்சிக்கு பய ன்படுத்தப்படும். உதாரண மாக, ஒரு டியூப்லைட்டில் உள்ள அலுமினியம் மற்றும் கண்ணாடிகளை பிரித்து, மறுசுழற்சி செய்து, புதிய தாக பயன்படுத்தப்படும். அதுபோன்றே மற்ற மின் சாதன பொருட்களும் தேவைக்கேற்ப பயன்படுத் தப்படும்.

    இதன்மூலம், வீடுகளில் தேவையற்ற பொருட்கள் தங்காது, சாலையிலும் குப் பைகள் தேங்காது. எனவே, மக்கள் மேற்குறிப்பிட்ட மையங்களை பயன்படுத் திக் கொண்டு, மாநகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முன்வரவேண்டும்.

    ×