search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தர்காடு"

    • இந்த தளத்தில் திருமண பரிகார பூஜை செய்து கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • இத்தகைய பொருட்கள் மூலம் மிக எளிதாக இந்த பரிகார பூஜையை செய்யலாம்.

    சித்தர்காடு திருமணம் ஊரில் உள்ள தாத்தீரிஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் திருமண பரிகார பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த தளத்தில் திருமண பரிகார பூஜை செய்து கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இதனால்தான் இந்த தலத்தை மிகச்சிறந்த பரிகார தலமாக நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    இந்த தலத்தில் திருமண பரிகாரம் செய்வதற்கு என்று சில நெறிமுறைகள் இருப்பதாக ஆலயத்தில் பூஜை செய்யும் பிரதான குருக்களில் ஒருவரான குமரன் குருக்கள் தெரிவித்தார்.

    நீண்ட நாட்களாக திருமண தடை இருப்பவர்கள் அல்லது உடனடியாக திருமணம் நடைபெற வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் இந்த தலத்தில் உரிய பரிகார பூஜையை செய்ய வேண்டும்.

    யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.

    போகும்போது வீட்டில் இருந்தே நெல்லிச்சாறு எடுத்துச்செல்ல வேண்டும்.

    நெல்லிக்காய் வாங்கி அதை நன்கு அரைத்து அதில் இருந்து சாறு எடுத்து செல்ல வேண்டும்.

    குறைந்தபட்சம் 2 லிட்டர் நெல்லிச்சாறு எடுத்துக்கொண்டு செல்வது நல்லது.

    2 லிட்டர் நெல்லிச்சாறு இருந்தால்தான் தாத்தீரிஸ்வரருக்கு அபிஷேகம் செய்வதற்கு சரியாக இருக்கும்.

    நெல்லிச்சாறுடன் பால், பன்னீரும் வாங்கிச்செல்ல வேண்டும். இந்த 3 பொருட்களாலும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்.

    வசதி வாய்ப்பு இருப்பவர்கள் 11 வகை அல்லது 21 வகை பொருட்கள் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யலாம்.

    குறைந்தபட்சம் நல்லெண்ணைய், சீயக்காய், கதம்ப பொடி, மஞ்சள்பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், தேன், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களை பயன்படுத்தி அபிஷேகம் செய்வது நல்லது.

    ஆனால் இத்தனை பொருட்களையும் அபிஷேகத்துக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    நெல்லிச்சாறு, பால், பன்னீர் ஆகிய மூன்றும் இருந்தாலே போதுமானது.

    என்றாலும், மனதிருப்திக்காக அதிக பொருட்களுடன் அபிஷேகங்கள் செய்யலாம்.

    இன்னும் வசதி இருப்பவர்கள் வஸ்திரம் வாங்கி கொடுக்கலாம்.

    அதேபோன்று இந்த தலத்தில் உள்ள பூங்குழலி அம்பாளுக்கும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்.

    இதற்கு மஞ்சள்தூள், பால், பன்னீர் கொண்டு செல்ல வேண்டும்.

    அதோடு தாலிச்சரடு, பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் கண்ணாடி வளையல், பிளவுஸ் பிட் கொண்டு செல்ல வேண்டும்.

    வசதி இருப்பவர்கள் அம்பாளுக்கு மஞ்சள், பச்சை, மெரூன் கலரில் புடவை எடுத்து சாத்தலாம்.

    6 கஜம் புடவை வாங்க வேண்டும். அதேபோன்று தாத்தீரிஸ்வரருக்கு 9-5 முழம் வேட்டி வாங்கி கொடுக்க வேண்டும்.

    மேலும் அர்ச்சணை செய்வதற்கு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஊதுவர்த்தி ஆகியவையும் கொண்டு செல்ல வேண்டும்.

    2 செட் அர்ச்சணை பொருட்கள் இருக்க வேண்டும்.

    இத்தகைய பொருட்கள் மூலம் மிக எளிதாக இந்த பரிகார பூஜையை செய்யலாம்.

    யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது பிறந்த நட்சத்திர தினத்தன்று இந்த அபிஷேக ஆராதனைகள் செய்வதுதான் சிறந்தது. அர்ச்சணை செய்து வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    ஒவ்வொருவரது ஜென்ம நட்சத்திரம் மாறுபடும் என்பதால் ஆலய குருக்களிடம் முன்கூட்டியே நேரத்தை கேட்டுக்கொண்டு செல்வது நல்லது.

    • எல்லோருக்கும் பொதுவாக பிறப்பின்மையே தலையாய வரமாக இருக்கும்.
    • சிவனைப் பற்றினாலேயன்றி உய்வதற்கு வேறு வழி கிடையாது.

    எல்லோருக்கும் பொதுவாக பிறப்பின்மையே தலையாய வரமாக இருக்கும்.

    ஏனென்றால் பூவுலகத்தில் படும் துன்பங்களைக் கண்டு கடவுளே இனி எனக்கு பிறவியே வேண்டாம் என்று முறையிடுபவர்கள்தான் அதிகம்.

    பிறப்பும், இறப்பும் அற்ற ஒருவனால் மட்டுமே, மற்ற உயிர்களின் பிறப்பறுக்க முடியும்.

    அப்படிப்பட்ட பிறப்பறுக்கக்கூடிய ஒருவனே நம் சிவபெருமான் ஆவான்.

    சிவபெருமானிடம் வேண்டுவது எல்லாம் எப்பிறப்பும் உய்யும் வழியாக, இப்பிறப்பில் அடிமைப்பட்டு அவனுக்கே ஆளாகி, பிறப்பறுக்க வேண்டுவது ஒன்றே ஆகும்.

    நாம் செய்யும் நல்வினை, தீவினை காரணமாக நமக்கு இப்பிறவியில் முத்தி கிட்டலாம்.

    இப்பிறவியில் பிறப்பறுக்க வேண்டுவது அல்லாமல் இனி எப்பிறவி வந்தாலும், அப்பிறவியிலும் பிறப்பறுக்க வேண்டுவது ஒன்றே முத்திக்கு வழியாகும்.

    சிவனைப் பற்றினாலேயன்றி உய்வதற்கு வேறு வழி கிடையாது.

    அவனே அனைத்திற்கும், முதலும் முடிவுமாய், முடிவும் முதலுமாய் விளங்குகின்றான்.

    அடியார்களின் வினைகளை அகற்றுவதற்காக ஆண்டவன் திரிசூலத்தை ஏந்திக்கொண்டு இருக்கிறான்.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய முச்சக்திகளும், மூவிலைச் சூலமாகும்.

    முன்பிறவியில் செய்த நன்மைகள் காரணமாக, ஒவ்வொரு பிறப்பிலும் சிறிது சிறிதாக அருள் பெற்று ஞானியர் நிலையினை அடைந்து பக்குவமடைய அவனுக்கு எத்தனையோ பிறவிகள் தேவைப்படலாம்.

    அடியார்களின் வினைகளை அகற்றுவதற்காக ஆண்டவன் திரிசூலத்தை ஏந்திக் கொண்டு இருக்கிறான்.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய முச்சக்திகளும், மூவிலைச் சூலமாகும்.

    காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களையும் மூவிலைச் சூலத்தால் நீக்கி அடியார்களை ஆட்கொள்வான்.

    எனவே ஈசனிடம் தஞ்சம் புகுந்து அவன் அருளைப் பெற்று பயன்பெற வேண்டும்.

    சமய குரவர்களும், சைவ சமய அருளாளர்களும், அடியார்களும் ஓதி உணர்ந்து பேரின்பம் அடைந்தது நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகும்.

    அனைவரும் இந்த ஐந்தெழுத்தாகிய பஞ்சாக்சரத்தையே தெப்பமாகக் கொண்டு பிறவிக் கடலைக் கடந்து பேரின்பத்தில் திளைத்து முத்தி பெற்றிருக்கின்றனர்.

    ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருள் முறைப்படி அமைந்துள்ளது.

    சிவன்-சி, அருள்-வா, ஆவி-ய, திரோம்-ந, மலம்-ம.

    "சிவயநம" என்னும் சொல்லுக்கு முறையாக, உய்த்துணர்தல், சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்பதாகும்.

    சி-சிறப்பு, வ-வனப்பு, ய-யாப்பு, ந-நடப்பு, ம-மறைப்பு.

    ஐந்தெழுத்தை ஆர்வமுடனும், அன்புடனும் ஓதி உய்வீர் என்று முன்னோர்கள் உலக மக்களுக்கு உணர்த்திச் சென்றுள்ளனர்.

    'சிவசிவ என்கிலர் தீவினை யாளர்

    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

    சிவசிவ என்றிடத் தேவரு மாவர்

    சிவசிவ என்னச் சிவகதி தானே' என்கிறார் திருமூலர்.

    இது உலகில் உள்ள ஏனைய மந்திரத்திற்கெல்லாம் தாயாக உள்ளது.

    பிறப்பும்-இறப்பும், வாழ்வும்-தாழ்வும், இன்பமும்-துன்பமும் யாவும் மாயமே.

    அவை நிலையற்றவை என்ற நல்லுணர்வுடையவர்களே.

    'பிறவியின் நோக்கம் சிவனடி சேரலே' என்று குறிக்கொண்டு அதற்கான நற்செயல்களை மேற்கொண்டு கடவுள் நெறியில் செயல்படுவார்கள்.

    • சித்தர்காடு சிவாலயத்தில் வீரபத்திரருக்கு அரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
    • அதன்படி பாண்டிய மன்னன் விரதம் இருந்து கோவில் கட்டும் பணியை மேற்கொண்டார்.

    சித்தர்காடு சிவாலயத்தில் வீரபத்திரருக்கு அரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

    பொதுவாக சிவாலயங்களில் வீரபத்திரரை காண முடியாது.

    ஆனால் தமிழகத்தில் எந்த தலத்திலும் இல்லாத வகையில் இங்கு மட்டும் வீரபத்திரருக்கு முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.

    இந்த ஆலயத்தை பாண்டிய மன்னான ஜடாவர்ம சுந்தரபாண்டியன் கட்டத் தொடங்கிய போது ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டன.

    ஆனால் கட்ட முடியவில்லை. அப்போது வீரபத்திரருக்கு விரதம் இருந்து பூஜை செய்தால்தான் கோவில் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    அதன்படி பாண்டிய மன்னன் விரதம் இருந்து கோவில் கட்டும் பணியை மேற்கொண்டார்.

    அதனால்தான் வீரபத்திரருக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

    • தாத்ரீஸ்வரர் ஆலயத்திலும் கொடி மரம் உள்ளது.
    • ஆதிகாலத்தில் இந்த தலத்தில் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடந்துள்ளது.

    ஒரு ஆலயத்தில் கொடி மரம் இருந்தால் அந்த ஆலயம் அனைத்து வகை ஆகம பூஜைகளையும் செய்யும் சிறப்புடையது என்று அர்த்தமாகும்.

    தாத்ரீஸ்வரர் ஆலயத்திலும் கொடி மரம் உள்ளது.

    ஆனால் பிரமோற்சவம் மட்டும் ஏனோ நடைபெறாமல் உள்ளது.

    ஆதிகாலத்தில் இந்த தலத்தில் மிக பிரமாண்டமாக பிரமோற்சவம் நடந்துள்ளது.

    இடைப்பட்ட காலத்தில் அதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

    இன்று வரை அந்த தடை நீடித்தபடி உள்ளது.

    மீண்டும் பிரமோற்சவம் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்பது ஏராளமான பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

    • காவடியின் இரு பக்கமும் வெள்ளி சொம்புகள் கட்டி தொங்க விடப்பட்டு இருக்கும்.
    • அன்று காலை 10 மணிக்கு முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

    சித்தர்காடு தலத்தில் தாத்ரீஸ்வரருக்கு குமரன் குருக்களும், விஸ்வநாதன் சிவாச்சாரியரும் 26வது தலைமுறையாக பூஜைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அதற்கேற்ப தாத்ரீஸ்வரர் அந்த பரம்பரைக்கு ஆண் வாரிசு வழங்கி உள்ளார்.

    ஒருதடவை ஆண் குழந்தை பிறக்காத நிலை இருந்தது.

    இதையடுத்து குருக்களின் முன்னோர்கள் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் பால் காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டனர்.

    இதன் மூலம் குருக்கள் குடும்பத்துக்கு ஆண் வாரிசு கிடைத்தது.

    இதையடுத்து தாத்ரீஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தை மாதம் பூசம் நட்சத்திரத் தினத்தன்று பிரமாண்டமான காவடி செய்து வேண்டுதலை நிறை வேற்றினார்கள்.

    அன்று முதல் இன்று வரை தை பூசம் காவடி நடந்து வருகிறது.

    அன்றைய தினம் காலை 7 மணிக்கு குருக்கள் காவடியுடன் மாட வீதி சுற்றி வருவார்.

    காவடியின் இரு பக்கமும் வெள்ளி சொம்புகள் கட்டி தொங்க விடப்பட்டு இருக்கும். மத்தியில் வெள்ளி வேல் இருக்கும்.

    குழந்தை இல்லாத தம்பதியர் அந்த இரு சொம்புகளிலும் பால் விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் போதும் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    அன்று காலை 10 மணிக்கு முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

    • சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது.
    • இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும்.

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களுக்கான விசேஷ திருக்கோவில்களில் தாத்திரீஸ்வரர் ஆலயம், சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.

    சுவாதி நட்சத்திர நாளில் பூவுலகில் யோக சக்திகள் மிகுந்திருக்கும்.

    சிரசாசனம், குக்குடாசனம், புஜங்காசனம் போன்ற யோக நிலைகளுக்கு சுவாதி நட்சத்திர தினம் மிகவும் ஏற்றதாகும்.

    சுவாதி நட்சத்திரத்தன்று முழு நெல்லிக்கனி சாற்றினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது.

    அதேபோல் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து கண்ணாடி வளையல் சாற்றி, வளையல்களை கல்யாணமான சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், சிறிய காணிக்கை சேர்த்து தருவதன் மூலம், திருமணம் ஆக காலதாமதமாகும் ஆண், பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில் குடும்ப ஒற்றுமைக்கு வேண்டி, அங்கபிரதட்சிணம் செய்வது சிறப்பாகும்.

    பெரியோர்களின் விருப்ப மின்றி திருமணம் செய்தவர்கள் அவர்களின் ஆசி பெறும் பொருட்டு இத்தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.

    மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் ஒரு சிறிய அகல் விளக்கு தீபமும் பிரபஞ்ச அளவில் அபூர்வ ஜோதி சக்திகளை அளிக்க வல்லதாகும்.

    எனவே சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் அடிக்கடி சென்று வழிபடவேண்டிய தலம் இந்த திருமணம் திருத்தலம்!

    இத்தலத்து இறைவனையும் இறைவியையும் குபேரன் வலதுகால் கட்டை விரலில் மட்டும் நின்று பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து நாகலிங்க மலர்களால் பூஜித்து, நெல்லிச் சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.

    பித்ருக்கள், தம் சந்ததியினர் உதவவேண்டியவர்களுக்கு உதவி செய்யாமல் விடுவதால் அதனால் ஏற்படக்கூடிய தோஷத்தை அடைகின்றனர்.

    அதனால் பித்ருக்களும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் இந்த சித்துக்காடு தலத்தில் தீப வழிபாடு செய்து பிராயசித்தம் அடைவதாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது.

    நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில் சுவாதி என்ற புனித சொல் அடங்கியிருக்கிறது.

    சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் மூன்று பேரிடம் இருக்கும் பீஜாட்சர சக்திகள் சுவாதி என்னும் சொல்லில் நிறைந்திருக்கிறது.

    அதனால் தான் சுவாதி நட்சத்திரக்காரர்கள் சிவன், விஷ்ணு இணைந்து அருள்பாலிக்கும் இத்தலத்துக்கு வந்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.

    • மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.
    • இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    சென்னையில் சித்தர்காடு இந்த ஊர் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்களுக்கு, மயிலாடுதுறை மேற்கே காவிரி தென் கீழ்க்கரையின் ஓரம் அமையப் பெற்றுள்ள சித்தர்காடு எனும் ஊர்தான் நினைவுக்கு வரும்.

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.

    இந்த ஊரில் சிற்றம்பல நாடிகள் என்பவர் தம் சீடர்களுடன் தங்கி இருந்தார்.

    அவர் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று தமது 62 சித்தர்களுடன் ஒரே இடத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

    அந்த இடத்தில் "ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் கோவில்" கட்டப்பட்டுள்ளது.

    63 சித்தர்களும் ஒரே இடத்தில் ஐக்கியமானதைக் குறிக்கும் வகையில் கருவறை சுற்றுச்சுவரில் 63 லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    இந்த இடத்தையும் சித்தர்காடு என்றே அழைக்கின்றனர்.

    பூந்தமல்லி - பட்டாபிராம் இடையில் பைபாஸ் சாலையையொட்டிய பகுதியில் இந்த புண்ணிய தலம் அமைந்துள்ளது.

    தற்போது இந்த ஊர் சித்துக்காடு என்றும் திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஊரில் அடங்கியுள்ள சித்தர்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி இருப்பதால் சமீப ஆண்டுகளாக இந்த ஊர், பக்தர்கள் தேடி வரும் தலமாக மாறியுள்ளது.

    ×