search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    குருக்கள் எடுக்கும் காவடி
    X

    குருக்கள் எடுக்கும் காவடி

    • காவடியின் இரு பக்கமும் வெள்ளி சொம்புகள் கட்டி தொங்க விடப்பட்டு இருக்கும்.
    • அன்று காலை 10 மணிக்கு முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

    சித்தர்காடு தலத்தில் தாத்ரீஸ்வரருக்கு குமரன் குருக்களும், விஸ்வநாதன் சிவாச்சாரியரும் 26வது தலைமுறையாக பூஜைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அதற்கேற்ப தாத்ரீஸ்வரர் அந்த பரம்பரைக்கு ஆண் வாரிசு வழங்கி உள்ளார்.

    ஒருதடவை ஆண் குழந்தை பிறக்காத நிலை இருந்தது.

    இதையடுத்து குருக்களின் முன்னோர்கள் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் பால் காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டனர்.

    இதன் மூலம் குருக்கள் குடும்பத்துக்கு ஆண் வாரிசு கிடைத்தது.

    இதையடுத்து தாத்ரீஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தை மாதம் பூசம் நட்சத்திரத் தினத்தன்று பிரமாண்டமான காவடி செய்து வேண்டுதலை நிறை வேற்றினார்கள்.

    அன்று முதல் இன்று வரை தை பூசம் காவடி நடந்து வருகிறது.

    அன்றைய தினம் காலை 7 மணிக்கு குருக்கள் காவடியுடன் மாட வீதி சுற்றி வருவார்.

    காவடியின் இரு பக்கமும் வெள்ளி சொம்புகள் கட்டி தொங்க விடப்பட்டு இருக்கும். மத்தியில் வெள்ளி வேல் இருக்கும்.

    குழந்தை இல்லாத தம்பதியர் அந்த இரு சொம்புகளிலும் பால் விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் போதும் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    அன்று காலை 10 மணிக்கு முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்படும்.

    Next Story
    ×