search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிங்கை ராமச்சந்திரன்"

    • அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா எம்.எல்.ஏ. கோட்டாவில் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தார்
    • உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன். 5 ஆண்டுகள் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்தேன்

    கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலையும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் நேற்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது, "அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் அப்பா எம்.எல்.ஏ. கோட்டாவில் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தார். ஆனால், நான் எம்.எல்.ஏ. கோட்டாவில் இல்லை.. அப்பா பெயரை வைத்து நான் படிக்கவில்லை. தனி மனிதனாக உழைத்து இந்த மண்ணில் நீங்கள் எல்லாம் உழைத்து தனிமனிதராக இருக்கிறீர்களோ அதேபோல உழைத்து 2 தகரப் பெட்டியோடு கோவைக்கு வந்தேன். 5 ஆண்டுகள் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் படித்தேன் என் பேசினார்.

    அண்ணாமலையின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் இது தொடர்பாக பேசிய சிங்கை ராமச்சந்திரன், எனது தந்தையான சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் இறந்தபோது எனக்கு 13 வயது. அவர் எப்படி எனக்கு, எம்.எல்.ஏ. கோட்டாவில் கல்லூரியில் சீட் வாங்கி தரமுடியும். எனது தந்தை குறித்த பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்" என வலியுறுத்தினார்.

    இந்நிலையில் அண்ணாமலையின் 5 வருட பொறியியல் படிப்பு தொடர்பாக ஸ்ரீராம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "அண்ணாமலை விசித்திரக் கதைகளின் உலகத்திற்கு சென்று பொறியியல் படித்தாரா?. அவர் 4 ஆண்டு பொறியியல் படிப்பிற்கு பதிலாக ஏன் 5 வருட பொறியியல் படிப்பை படித்துள்ளார்?. ஒருவேளை அவர் மாயாஜால பொறியியல் சமன்பாடுகளின் பிரமையில் தொலைந்து போயிருக்கலாம். ஆமாம் அவர் குறிப்பிடும் இந்த மர்மமான எம்.எல்.ஏ. கோட்டா என்றால் என்ன? என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,

    "பொறியியல் பட்டப்படிப்பு 1984 இல் 5 வருடத்திலிருந்து 4 வருடமாக மாற்றப்பட்டது. 1987 இல் REC திருச்சியில் (இப்போது NITT) 4-ஆண்டு B.Tech (Hons) பட்டம் பெற்றேன். பி.எஸ்.ஜி கல்லூரியில் 2002-ல் 5 வருட பொறியியல் பட்டப்படிப்பை எப்படி வழங்கியது?. ஒருவேளை இது ஒருங்கிணைந்த B.Tech & M.Tech பட்டபடிப்பா?. அப்படியென்றால்... அது 5 ஆண்டு பட்டபடிப்பாக இருக்கலாம்?

    அந்த படிப்பிற்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லையா? மேலும் "எம்எல்ஏ கோட்டா" என்றால் என்ன, அது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? நான் ஓபன் கோட்டாவின் கீழ் REC திருச்சியில் சேர்ந்தேன். 1987 இல் நான் அமெரிக்காவிற்குச் செல்லும் வரை இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    • சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார்
    • எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது

    கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், அண்ணாமலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார். தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம்-வில் படித்தவர்.

    சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கு வயது 11. சிங்கை ராமச்சந்திரன் கல்லூரியில் 2002-ம் ஆண்டு சேருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். இறந்து போன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கித் தர முடியும்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

    மேலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர் சிங்கை ராமச்சந்திரன். அதுவுமா எம்.எல்.ஏ கோட்டா? என கேள்வி எழுப்பியுள்ளனர்

    இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்,எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது. 

    நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்கிறார்.

    அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார். எனக்கு அப்பா இல்லை நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன்.

    அண்ணாமலை இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம்.

    காரை விற்று கடனை அடைத்தோம், பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர்.

    இதற்கு அண்ணாமலை மறைந்த என் தந்தை குறித்து பேசியதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×