search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாளக்கிராமம்"

    • இறை வழிபாட்டிற்கு, பக்திதான் பிரதானம்.
    • நீங்கள் எப்படி பூஜித்தாலும் பலன் ஒன்று தான்.

    * பஞ்சாயதன பூஜையை, காலை எழுந்தவுடன் குளித்து விட்டு பூஜை அறையில் அமர்ந்து செய்வது விசேஷம். இந்த பூஜை செய்யும் பொழுது வடக்கு திசை அல்லது கிழக்கு திசையை நோக்கி உட்கார்ந்து கொண்டு செய்வது சிறப்பானது. பஞ்சாயதன சிலைகளை கிழக்கு நோக்கி வைத்து நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்யலாம். அல்லது வடக்கு திசை நோக்கி பஞ்சாயதன சிலைகளை வைத்துவிட்டு, நாம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜிக்கலாம்.

    * பூஜைக்கு வாசனை தைலம், பஞ்சகவ்யம், பஞ்சா மிர்தம், பசும்பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், அரைத்த சந்தனம், சுத்த ஜலம் ஆகியவை சிறப்பானவை. இவற்றில் நம்மால் எதைக் கொண்டு பூஜிக்க முடியுமோ, அதைக் கொண்டு பூஜை செய்யலாம்.

    'ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் ஸ்ரியமிச்சேத் ஹுதாஸாத் ஈஸ்வராத் க்ஞானமன்விச்சேத் மோக்ஷமிச் சேஜ் ஜனார்தனாத்' என்ற ஒரு சுலோகத்தின்படி பஞ்சாயதன பூஜையில் சூரிய பகவானை பூஜிப்பதால் நல்ல ஆரோக்கியமும், சிவபெருமானை பூஜிப்பதால் நல்ல ஞானம் மற்றும் தெளிவான சிந்தனையும், மகாவிஷ் ணுவை போதிப்பதால் பட்டம், பதவி, புகழ், சத்ரு ஜெய மும், கணபதியை பூஜிப்பதால் தடைகள் விலகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அம்மனை பூஜிப்பதால் மங்கலம் உண்டாகும்.

    இந்த பூஜையை வழக்கமாக செய்யும் ஆண்கள் வெளியில் சென்று இருக்கும் பொழுதும், பெரியோர்கள் இல்லாத பொழுதும், பெண்களும் மேற்கொள்ளலாம்.

    * கிடைப்பதற்கு அரிய இந்த மானிட பிறவியில், வாய்ப்பைப் பயன்படுத்தி எளிய முறையில் இந்த பூஜையை செய்யலாம். சக்திக்கு ஏற்ற வகையில் பூஜை பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த வழிபாட்டிற்கு, பக்திதான் பிரதானம்.

    * பஞ்சாயதன பூஜையில் முக்கியமான விசேஷம் என்னவென்றால், ஒருவர் எந்த தெய்வத்தை பிரதானமாக கருதுகிறாரோ, அந்த தெய்வத்தை மையமாக வைத்தும், மற்ற தெய்வங்களை சுற்றி வைத்தும் பூஜிப்பார்கள். நடுநாயகமாக சிவபெருமானை வைத்து பூஜிப்பவர்கள், வடகிழக்கு திசையில் இருந்து வலமாக விஷ்ணு, சூரிய பகவான், கணபதி மற்றும் அம்பிகையை வைத்து பூஜிக்கலாம்.

    இதற்கு 'சிவ பஞ்சாயதன பூஜை' என்று பெயர். அம்பாளை பிரதானமாக வைத்து 'சக்தி பஞ்சாயதன பூஜை' செய்வார்கள். அம்பிகையை நடுவிலும், தென் மேற்கில் இருந்து வலமாக கணபதி, சூரியன், விஷ்ணு, சிவபெருமானை வைத்தும் பூஜை செய்வார்கள். மகா விஷ்ணுவை நடுவில் வைத்து பூஜிப்பவர்கள், தென் கிழக்கில் இருந்து வலமாக கணபதி, சூரியன், அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து 'விஷ்ணு பஞ்சாயதன பூஜை' செய்வார்கள்.

    விநாயகப் பெருமானை மையமாக வைத்து பூஜிப்பவர்கள், தென்கிழக்கில் இருந்து வலமாக விஷ்ணு, சூரியன். அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து செய்வது 'கணபதி பஞ்சாயதன பூஜை' ஆகும். சூரிய பகவானை பிரதானமாக வைத்து பூஜிப்பவர்கள், மையத்தில் சூரிய பகவானையும் தென்கிழக் கில் இருந்து வலமாக விஷ்ணு, கணபதி, அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து பூஜிப்பார்கள். இதற்கு 'சூரிய பஞ்சாயதன பூஜை' என்று பெயர். அவரவருக்கு விருப்பமான தெய்வங்களை பிரதானமாக வைத்து, ஐந்து விதமாக பூஜை செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி பூஜித்தாலும் பலன் ஒன்று தான்.

     பூஜையின் போது சொல்ல வேண்டிய சுலோகம்

    நம: சிவாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே

    ஸநந்தினே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம:

    நம: சிவாப்யாம் நவ யௌவனாப்யாம்

    பரஸ்பராச் லிஷ்ட வபுர்தராப்யாம்

    நகேந்த்ர - கன்யா -வ்ருஷ - கேதனாப்யாம்

    நமோ நம: சங்கர - பார்வதீப்யாம்

    சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் சுரேஷம்

    விச்வாகாரம் ககன ஸத்ருசம் மேக வர்ணம் சுபாங்கம்

    லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகி ஹ்ருத்யான கம்யம்

    வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வலோகைக நாதம்

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே

    சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.

    இந்த சுலோகத்தைச் சொல்லி பூஜையை முடித்த பின்னர், ஐந்து முறை இறைவனை வணங்க வேண்டும்.

    • அற்புதமான பலன் தரக்கூடிய அபூர்வமான வழிபாட்டு முறை.
    • இந்த வழிபாட்டிற்கு எந்திரமோ, விக்கிரகமோ கிடையாது.

    ஆதிசங்கரர் இந்து மதத்தில் பல பிரிவுகளாக சிதறிக்கிடந்த வழிபாடுகளை ஒருங்கிணைத்து, சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், கணாபத்யம் என்று வகைப்படுத்தினார். இதில் கவுமாரம் மற்றும் கணாபத்யம் ஆகியவை சைவ மதத்தின் துணைப் பிரிவுகளாகவே சிலரால் சொல்லப்படும். இந்த 6 வகையான வழிபாட்டு முறைகளையும் மேலும் எளிமைப்படுத்தி, அனைவருமே தினமும் எளிய முறையில் பூஜிக்கக்கூடிய, மறைந்திருந்த பஞ்சாயதன பூஜையை வெளிப்படுத்தினார். வசதி உள்ளவர்கள் இதை பெரிய அளவில் விஸ்தாரமாக தினமும் செய்யலாம். வசதி இல்லாதவர்கள் குறைந்தபட் சம் 10 அல்லது 15 நிமிடத்தில் இந்த பூஜையை செய்து முடித்து விடலாம். அற்புதமான பலன் தரக்கூடிய ஒரு அபூர்வமான வழிபாட்டு முறை இதுவாகும்.

    இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், இதற்கு எந்திரமோ அல்லது விக்கிரகமோ கிடையாது. இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து மூர்த்தங்களை வைத்து பூஜிக்கக்கூடிய முறை இது. எனவே இதற்கு 'பஞ்சாய தன பூஜை' என்று பெயர் வந்தது.

     சிவபெருமானுக்குரிய இயறகை மூர்த்தம்- பாண லிங்கம், அம்பாளுக்குரியது சொர்ணமுகி, விஷ்ணுவிற்குரியது சாளக்கிராமம், சூரியனுக்குரியது ஸ்படிகம், விநாயகருக்குரியது சோனாபத்திரம் என்னும் கல். ஈஸ்வரன், அம்பாள், மகாவிஷ்ணு, விநாயகப் பெருமான், சூரிய பகவான் ஆகிய ஐந்து பேர்களை சேர்த்து வைத்து பூஜை செய்யக்கூடிய இந்த முறை மிக விசேஷமாக கருதப்படுகிறது.

    இதில் சிவபெருமானுக்குரிய பாணலிங்கம் இயற்கையாகவே நர்மதை நதிக்கரையில் கிடைக்கும். பாணாசுரன் தன் ஆயிரம் கரங்களால் பாணலிங்கத்தை தினமும் பூஜித்து இந்த நதியில் விட்டதாக சொல்வர். இந்த பாணலிங்கத்தில் சிவ பெருமான் இருப்பதாக ஐதீகம்.

    அம்பிகையின் சொரூபமான சொர்ணமுகி என்னும் கல், ஆந்திராவில் சொர்ணமுகி ஆற்றில் இயற்கையாகவே கிடைக்கிறது. இதில் தங்க ரேகைகள் காணப்படும். அடுத்து, விஷ்ணு பகவானின் வடிவமாக விளங்கக் கூடிய சாளக்கிராமம். இது நேபாள தேசத்தில் முக்திநாத் ஷேத்திரத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கிறது.

    சூரிய பகவானுக்குரிய ஸ்படிகமும், தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் என்ற இடத்திற்கு அருகில் இயற்கையாகவே கிடைக்கிறது. விநாயகப்பெருனின் உருவத்திற்குரிய மூர்த்தமாக சொல்லப்படும் சோனா பத்திரக்கல், கங்கை கலக்கக்கூடிய சோனாநதியின் கரையில் கிடைக்கப்பெறுகிறது. இந்த ஐந்து மூர்த்தங்களையும், ஐந்து தெய்வங்களாக பாவித்து பூஜிப்பதால், சகல நலன்களும் தேடி வரும் என்கிறார்கள்.

    மேற்கண்ட தெய்வ மூர்த்தங்கள் அனைத்து சிறிய வடிவங்களிலேயே கிடைக்கப்பெறும். இவற்றில் சாளக்கிராமம் மட்டுமே சற்று பெரியதாக இருக்கும். இவை அனைத்தையும் ஒரு சின்ன மரப்பெட்டியில் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு எளிய முறையில்

    தினமும் அபிஷேகம் செய்யலாம். மந்திர உபதேசங்கள் தெரிந்தவர்கள் அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம். அல்லது எளிய முறையில் எட்டு அல்லது 16 நாமாவளி சொல்லி, துளசி, வில்வம் போன்ற இலைகளாலோ, சிறிய அளவிலான பூக்களைக் கொண்டோ பூஜை செய்யலாம்.

    சிறிய மரப்பெட்டியில் வைக்கப்படும் இந்த மூர்த்தங்களை, வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தாலும் கையில் எடுத்துச் சென்று அங்கு வைத்தும் பூஜையை நடத்த முடியும். இவற்றிற்கு நைவேத்தியமாக படைக்க பெரிய செலவு எதுவும் தேவையில்லை. நம்மால் எது முடியுமோ, அதை நைவேத்தியமாக படைக்கலாம்.

    உலர்ந்த திராட்சை, கல் கண்டு போன்றவை கூட போதுமானது. அதையே கொஞ்சம் விரிவாக செய்யக்கூடியவர்கள், தினமும் நீராடி, அன்னம் வைத்து நெய் (மகா நைவேத்தியம்) விட்டு பூஜிக்கலாம். வெளியே செல்லும்போது பூஜைக்குரிய சந்தனம், குங்குமம், துளசி, வில்வம் எடுத்துக்கொண்டு செல்லலாம்.

    துளசி, வில்வம் சற்று வாடினால் கூட கவலைப்பட வேண்டாம். தொடர் பயணத்தில் தினமும் எங்கு நமக்கு நேரம் கிடைக்கிறதோ, அங்கேயே பஞ்சாயதன பூஜையை செய்யலாம். சொர்ணசே பஞ்சாயதன பூஜையில் முருகனுக்குரிய வழிபாடு சொல்லப்படவில்லை.

    ஆனால் சிலர் முருகப்பெருமான் வழிபாடு செய்ய வேண்டும் என கருதுவார்கள். அவர்கள் வேல் வைத்து முருகப்பெருமானை மற்றவற்றோடு சேர்த்து பூஜிக்கலாம். வெளியில் செல்லும் போதும் அந்த வேலை எடுத்துச் செல்லலாம். (சில இடங்களில் வேலையும் சேர்த்து வழிபாடு செய்யும் வழக்கமும் உண்டு).

    எப்படி கூப்பிட்டாலும் பக்தியோடு அழைப்பவர்களுக்கு, இறைவன் கட்டாயம் வந்து அருள் செய்வார். சிவன், விஷ்ணு, கணபதி, சூரியன், அம்பாள் ஆகிய தெய்வங்களுடன் பஞ்சாயதன பூஜையை செய்பவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் ஏற்றம் உண்டு. சகல பாவங்களும் விலகும். பிரம்மஹத்தி, கோஹத்தி, சிசுஹத்தி போன்ற தோஷங்களும் நிச்சயமாக நீங்கும். இந்த ஒவ்வொரு மூர்த்தங்களிலும் இயற்கையாகவே சுவாமி இருக்கிறார் என்று அறிந்து நம் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் தான் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரும் என்பார்கள். பஞ்சாயதன வழிபாட்டு முறையில் இறைவனை பூஜித்து வருபவர்களுக்கு, எந்த விதமான செய்வினைகளோ, கெடுதல்களோ, அகாலமரணமோ, விபத்துகளோ ஏற்படாது என சொல்லப்பட்டுள்ளது.

    ×