search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச விமான நிலையம்"

    • ரூ.1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையமாகும்.
    • அதிகாரிகளிடம் வசதியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அறிந்து கொண்டார்.

    பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் சென்ற நிலையில், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர், ராஜஸ்தான் பயணத்தை முடித்துகொண்டு இன்று மாலை பிரதமர் மோடி குஜராத்துக்கு சென்றார். அங்கு ராஜ்கோட் நகர் அருகே புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். ரூ.1405 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையமாகும்.

    ராஜ்கோட்டில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள ஹிராசர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சர்வதேச விமான நிலையம், 2,534 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் இந்திய விமான நிலைய ஆணையம் 1,500 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை கட்டியுள்ளது.

    இந்த விமான நிலையம், 3,040 மீட்டர் (3.04 கிமீ) நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதையைக் கொண்டுள்ளது. அங்கு 14 விமானங்கள் எந்த இடத்திலும் நிறுத்தப்படலாம் என்று அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 2017 ல், சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் மோடி நடத்தினார்.

    இந்நிலையில், இன்று சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர், விமான நிலைய வளாகத்தில் நடந்து சுற்றிப்பார்த்தார். அதிகாரிகளிடம் வசதியின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து அறிந்து கொண்டார்.

    மேலும், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.860 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    நாளை, குஜராத்தின் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் செமி கான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    • பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது.
    • புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக 'பைலட்' ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி 'பைலட்' ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • புதிய நவி மும்பை விமான நிலையத்திற்கும் மும்பை விமான நிலையத்திற்கும் இடையே உள்ள தூரம் 40 கி.மீ ஆகும்.
    • புதிய விமான நிலையம் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்றார்.

    விமான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் நவி மும்பையில் உள்ள உல்வேயில் மும்பை பெருநகரப் பகுதியின் மையத்தில் அமைக்கப்படுகிறது.

    இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டர்களில் ஒன்றான அதானி விமான நிலையத்தால் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான்கு கட்டங்களாக கட்டப்படவுள்ள இந்த விமான நிலையத்தை உலகின் மிகவும் ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வகையில் மாற்றும் திட்டம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். விமான நிலையம் முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும். இது பசுமை மின்சாரத்தையும் பரவலாகப் பயன்படுத்தும், அதில் பெரும்பகுதி சூரிய சக்தியை தளத்தில் உற்பத்தி செய்யும் என்று திட்டத்தை நிர்வகிக்கும் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் தேசிய மலரான தாமரையால் ஈர்க்கப்பட்டு முனையம் வடிவமைக்கப்படுகிறது.

    நவி மும்பையில் 1160 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்படும் சர்வதேச விமான நிலையம் முதல் இரண்டு கட்டங்கள் டிசம்பர் 2024க்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து, விமான நிலைய பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.

    தளத்தில் வான்வழி ஆய்வுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தின் அம்சங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தனர்.

    புதிய விமான நிலையம் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்றும் மும்பை விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் என்று முதல்வர் கூறினார்.

    ×