search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜன்னல்"

    • பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது.
    • புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக 'பைலட்' ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி 'பைலட்' ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • குமரி மணிமாறனுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • அப்போது 4 பேரும் அங்கு வந்து வீட்டு கதவை தட்டி உள்ளனர்.

    கன்னியாகுமரி : 

    குளச்சல் சாஸ்தான்கரையை சேர்ந்தவர் குமரி மணிமாறன் (வயது 45).

    சமூக ஆர்வலரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்தன குமார், சதன்வி, சங்கர், அனீஸ் ஆகியோருக்குமிடையே வெள்ளியாக்குளம் கோவில் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இரவு குமரி மணிமாறன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 4 பேரும் அங்கு வந்து வீட்டு கதவை தட்டி உள்ளனர்.

    தொடர்ந்து வெளியில் வந்த குமரி மணிமாறனுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் 4 பேரும் கற்களை எடுத்து வீசியதில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக குமரி மணிமாறன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளனர்.

    சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை அப்பகுதியைச் சேர்ந்தவர் மீட்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    பீஜிங்:

    சீனாவின் சியாங் மாகாணத்தில் உள்ள ஹூனன் நகரில் 2 வயது குழந்தை வீட்டில் தனியாக இருந்தது.மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்து விட்டது. அவனது தலை கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொள்ள அபாயகரமான நிலையில் குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் படிக்கட்டுகள் வழியே சென்றால் கால தாமதமாகி விடலாம் என்று எண்ணி கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல்கள் வழியே படபடவென ஏறி சென்று குழந்தையை மீட்டார்.

    முன்னாள் ராணுவ வீரரான அவர் மிகவும் தாழ்மையுடன், நான் ஒரு ராணுவ வீரன், இந்த நிலைமையில் எந்த ராணுவ வீரரானாலும் நான் செய்ததைத்தான் செய்திருப்பார் என்கிறார்.

    ஷாங்கையும் சீன இணையதளம் ஒரு ஹீரோ என பாராட்டி, நீங்கள் எங்கள் சீன ஸ்பைடர்மேன் உங்களுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதேபோல் பிரான்ஸில் கசாமா என்ற வாலிபர் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை மீட்டதற்காக பிரான்ஸ் குடியுரிமை பெற்றது நினைவிருக்கலாம்.

    ×