search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு ரெயில்"

    • தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விவசாய உர மூட்டைகளை ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ரெயில் பாதையில் இருந்து சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் பெங்களூருக்கு செல்லக்கூடிய பயணிகளின் ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் 5 மணிநேரம் தாமதமாக சென்றது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விவசாய உர மூட்டைகளை ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது.

    அந்த ரெயில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக வந்து, தருமபுரி மாவட்டம், தொப்பூர், தருமபுரி, மாரண்டஅள்ளி வழியாக சென்று கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, ஓசூர் வழியாக வந்து பெங்களூருவை அடைவது வழக்கம்.

    இந்த நிலையில் அந்த ரெயில் நள்ளிரவு 2 மணியளவில் மாரண்டஅள்ளி வழியாக ராயக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலின் சக்கரங்களில் தொடர்ச்சியாக தீப்பொறியுடன் புகை வெளியேறி கொண்டிருந்தது.

    இதை கவனித்த ரெயில்வே ஊழியர் உடனடியாக ராயக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சரக்கு ரெயில் செல்வதற்கான சிக்னல்கள் ஆப் செய்து விட்டார்.

    திடீரென்று ரெயில்வே பாதையில் சிக்னல்கள் கிடைக்காததால் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து உள்ளது என்று எண்ணி சரக்கு ரெயிலை என்ஜின் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார்.

    அப்போதுதான் அந்த சரக்கு ரெயில் சக்கரத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறியதை கவனித்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சரக்கு ரெயிலின் சக்கரங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது 6 பெட்டிகள் ரெயில்வே பாதையில் இருந்து விலகி தடம் புரண்டுள்ளது என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர்கள் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த சேலம் ரெயில்வே கோட்டம் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்டம் அதிகாரிகள், போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    அதிகாலையிலேயே 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களை வரவழைத்து ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதையில் இருந்து 6 பெட்டிகளின் சக்கரங்கள் விலகியதற்கான காரணம் என்ன? என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்லக்கூடிய குர்லா எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு செல்லக்கூடிய பாசஞ்சர் ரெயில் ஆகிய 3 ரெயில்கள் தருமபுரி, மொரப்பூர் வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
    • ரேசன் அரிசியை அதிகாரிகள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாவட்டங்களிலிருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து 21 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 1250 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை அதிகாரிகள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சிமெண்டு தூண்கள் அதிக எடை கொண்டவை என்பதால் உடனடியாக ஊழியர்களால் அகற்ற முடியவில்லை.
    • சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர்- தொழுப்பேடு இடையே தண்டவாளத்தில் உள்ள சிமெண்டு தூண்களை மாற்றும் பணி கடந்த 10 நாட்களுக்கு மேல் நடந்து வருகிறது. இதில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சிமெண்டு தூண்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அச்சரப்பாக்கம்-தொழுப்பேடு இடையே சென்று கொண்டு இருந்த போது சரக்குரெயிலின் மேல் டிராலியில் இருந்த சிமெண்டு தூண்கள் சரிந்தது. மொத்தம் 3 டிராலிகள் முழுவதும் சரிந்ததால் அதில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட சிமெண்டு தூண்கள் தண்டவாளத்தில் சரிந்து விழுந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரக்கு ரெயில் டிரைவர் உடனடியாக ரெயிலை நடு வழியில் நிறுத்தினார். உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

    சிமெண்டு தூண்கள் அதிக எடை கொண்டவை என்பதால் உடனடியாக ஊழியர்களால் அகற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதனால் மற்ற தண்டவாளம் வழியாக ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து காலையில் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதே போல் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரெயில்கள் அனைத்தும் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் வரும் வழியில் நிறுத்தப்பட்டன.

    மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து புறப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், மேல்மருவத்தூர் அருகே பாண்டிச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சிலர் ரெயிலில் இருந்து இறங்கி அங்கிருந்து பஸ்களில் புறப்பட்டு சென்றனர். குறித்த நேரத்துக்கு செல்ல முடியாததால் சென்னை நோக்கி வந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    காலை 11.30 மணி அளவில் சிமெண்டு தூண்கள் முழுவதும் அகற்றப்படு சரக்கு ரெயில் அங்கிருந்து சென்றது.

    சுமார் 5 மணிநேரத்துக்கு மேல் ரெயில் சேவை பாதிக்கப் பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில்குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும்.

    பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ரயில் பெட்டியில் இருந்து ரேசன் அரிசி லாரி களில் ஏற்றப்பட்டு கிட்டங்கி களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலமாக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    ஆந்திராவில் இருந்து 21 பெட்டிகளில் 1326 டன் புழுங்கல் அரிசி இன்று நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ரயில் பெட்டியில் இருந்து ரேசன் அரிசி லாரி களில் ஏற்றப்பட்டு கிட்டங்கி களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சரக்கு ரெயிலில் வந்த பச்சரிசியை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
    • கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் சரக்கு ரெயில் மூலமாக ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலையில் காசி நாடாவில் இருந்து 21 பெட்டிகளில் 1300 டன் பச்சரிசி வந்தது. சரக்கு ரெயில் வந்த பச்சரிசியை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ரெயிலின் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் காட் பெட்டியில் இருந்து 7 -வது வேகனில் உள்ள 2 சக்கரங்கள் திடீரென பழுதாகி நின்றது
    • பெரும் விபரீத சம்பவம் நடைபெறுவதற்கு முன் இதனை கண்ட காட் பெட்டியிலிருந்து ரெயில்வே ஊழியர் உடனே இதுபற்றி என்ஜின் டிரைவருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார்.

    நாகா்கோவில்:

    கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் நெல்லைக்கு புறப்பட்டது. சரக்கு ரயிலில் மொத்தம் 87 வேகன்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ரெயில் இன்று காலை நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலின் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் காட் பெட்டியில் இருந்து 7 -வது வேகனில் உள்ள 2 சக்கரங்கள் திடீரென பழுதாகி நின்றது. இதனால் தண்டவாளத்தில் சக்கரங்கள் ஓடாமல் அதில் உரசியபடி சென்றது. இதன்காரணமாக அந்த சக்கரத்திலிருந்து தீப்பொறி கிளம்பியது.

    அந்த வேகன் முழுவதும் டீசல் நிரப்பப்பட்டு இருந்தன. அதில் இருந்த டீசலும் வேகனில் இருந்து சிந்தியடி வழிந்து கொண்டு இருந்தன.

    பெரும் விபரீத சம்பவம் நடைபெறுவதற்கு முன் இதனை கண்ட காட் பெட்டியிலிருந்து ரெயில்வே ஊழியர் உடனே இதுபற்றி என்ஜின் டிரைவருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

    பின்னர் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் இருவரும் சம்பந்தப்பட்ட வேகனை ஆய்வு செய்தனர். இதில் சக்கரத்தின் பிரேக் செயல் இழுந்து தண்டவாளத்தில் ஓடமால் இருந்ததும், இதனால் தீப்பொறி கிளம்பியதும் தெரியவந்தது.

    இதனை டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் இணைந்து சரிசெய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு மற்ற ரெயில்வே ஊழியர்களும் வந்து பார்வையிட்டனர். பழுதுநீக்கப்பட்டதை உறுதி செய்த பின்பு ரெயில் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    • தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
    • ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திலுள்ள ரேசன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் ரேசன் பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூரில் இருந்து 22 வேகன்களில் 1650 டன் ரேசன் அரிசி இன்று நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. சரக்கு ரெயிலில் வந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

    கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • ரேசன் அரிசி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்
    • ரேசன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் ரேசன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரெயில் மூலமாக 1250 டன் ரேசன் அரிசி இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

    கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தெலுங்கானாவில் இருந்து 42 வேகங்களில் வந்தது.
    • ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தெலுங்கானாவில் இருந்து 42 வேகங்களில் 2600 டன் ரேஷன் அரிசி இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது. சரக்கு ரெயிலில் வந்த ரேஷன் அரிசியை ஊழியர்கள் லாரியில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.

    கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்
    • ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேசன் பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரெயில் மூலமாக 22 வேகன்களில் 1550 டன் ரேஷன் அரிசி இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசி ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்குக் கொண்டு சென்றனர்.
    • அரிசி ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் அரிசிகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்ட சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தெலுங்கானாவில் இருந்து 42 வேகன்களில் 3200 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிக ளுக்குக் கொண்டு சென்றனர்.

    கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசி ரேசன் கடை களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    ×