search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் வந்த 1,550 டன் ரேசன் அரிசி
    X

    நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் வந்த 1,550 டன் ரேசன் அரிசி

    • லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்
    • ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேசன் பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரெயில் மூலமாக 22 வேகன்களில் 1550 டன் ரேஷன் அரிசி இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ரேசன் அரிசியை லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசி ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    Next Story
    ×