என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரெயிலில் 1650 டன் ரேசன் அரிசி வந்தது
- தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
- ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்திலுள்ள ரேசன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் ரேசன் பொருட்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் இருந்து 22 வேகன்களில் 1650 டன் ரேசன் அரிசி இன்று நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. சரக்கு ரெயிலில் வந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர்.
கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
Next Story