search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனிக்கிழமை பெருமாள் வழிபாடு"

    • பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும்.
    • பிரச்சனைகள் தீர பெருமாளிடம் முறையிட வேண்டும்.

    இன்று மார்கழி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. இந்த மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் கூட இன்றைய தினம் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம், மார்கழி மாதம் முழுவதும் பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும். இன்றைய தினம் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. பெருமாளுக்கு உரிய நட்சத்திரம்.

    இந்த மார்கழி மாதம் முழுவதும் உங்களால் அதிகாலை வேளையில் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் சரி, இன்று பெருமாளை நினைத்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். வீட்டில் பெருமாளுக்கு உகந்த விஷ்ணு சகஸ்ரநாமம், இல்லையென்றால் சுப்ரபாதம் ஒலிக்க விடுங்கள். மனதை அமைதியாக வைத்து பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பெருமாளிடம் முறையிட வேண்டும்.

    மகாலட்சுமி தாயாரிடமும் பணக்கஷ்டம் சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைக்கலாம். பிறகு வீட்டு பக்கத்தில் ஏதாவது பெருமாள் கோவில் இருந்தால் கோவிலுக்கு சென்று பெருமாளை சேவியுங்கள். இன்றைய தினம் பெருமாள் கோவிலுக்கு சென்று உங்களுடைய எவ்வளவு பெரிய வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும்.

    பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி இலை, பிரசாதம் இவைகளை வாங்கிக் கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில் இருக்கும் மகாலட்சுமி தாயாரையும் மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் பெருமாள் கோவிலில் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் மல்லிப்பூ வாங்கி கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்புங்கள்.

    பெருமாள் கோவில் பிரசாதமான இந்த துளசி இலையை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. வாங்கி வந்த துளசி இலையை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு அந்த தண்ணீரை தீர்த்தமாக பருகலாம். மீதம் இருக்கும் துளசி இலையை, பீரோவில் நகை வைக்கும் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். பண கஷ்டமும் தீரும். இந்த துளசி தீர்த்தத்தை குடிப்பதால் உங்கள் உடம்பில் இருக்கும் பிணி பீடை விலகும். விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்கள் இல்லறம் இருள் நிலையில் இருந்து விலகும்.

    ×