search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perumal worship"

    • பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும்.
    • பிரச்சனைகள் தீர பெருமாளிடம் முறையிட வேண்டும்.

    இன்று மார்கழி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. இந்த மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் கூட இன்றைய தினம் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம், மார்கழி மாதம் முழுவதும் பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும். இன்றைய தினம் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. பெருமாளுக்கு உரிய நட்சத்திரம்.

    இந்த மார்கழி மாதம் முழுவதும் உங்களால் அதிகாலை வேளையில் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் சரி, இன்று பெருமாளை நினைத்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். வீட்டில் பெருமாளுக்கு உகந்த விஷ்ணு சகஸ்ரநாமம், இல்லையென்றால் சுப்ரபாதம் ஒலிக்க விடுங்கள். மனதை அமைதியாக வைத்து பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பெருமாளிடம் முறையிட வேண்டும்.

    மகாலட்சுமி தாயாரிடமும் பணக்கஷ்டம் சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைக்கலாம். பிறகு வீட்டு பக்கத்தில் ஏதாவது பெருமாள் கோவில் இருந்தால் கோவிலுக்கு சென்று பெருமாளை சேவியுங்கள். இன்றைய தினம் பெருமாள் கோவிலுக்கு சென்று உங்களுடைய எவ்வளவு பெரிய வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும்.

    பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி இலை, பிரசாதம் இவைகளை வாங்கிக் கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில் இருக்கும் மகாலட்சுமி தாயாரையும் மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் பெருமாள் கோவிலில் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் மல்லிப்பூ வாங்கி கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்புங்கள்.

    பெருமாள் கோவில் பிரசாதமான இந்த துளசி இலையை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. வாங்கி வந்த துளசி இலையை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு அந்த தண்ணீரை தீர்த்தமாக பருகலாம். மீதம் இருக்கும் துளசி இலையை, பீரோவில் நகை வைக்கும் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். பண கஷ்டமும் தீரும். இந்த துளசி தீர்த்தத்தை குடிப்பதால் உங்கள் உடம்பில் இருக்கும் பிணி பீடை விலகும். விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்கள் இல்லறம் இருள் நிலையில் இருந்து விலகும்.

    புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம் பெற வேங்கடவனை நினைத்து விரதம் இருக்க நல்ல நாளாக சனிக்கிழமையைச் சொல்லலாம். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீட்சி பெற ஒரே வழி எம்பெருமானை சரணடைவதுதான். சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வன். புரட்டாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார்.  நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே  சனிக்கு அதிபதியாக இருப்பவர்.

    ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார்.அப்போது எதிர்பட்ட நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற .. அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக வழக்கத்துக்கே உரிய தம் கலக பாணியில் தெரிவித்தார் நாரதர். என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று சொல்லும்போது தான் கவனம் அவற்றில் போகும். குழந்தைகளும் இதைத்தான் விரும்புவார்கள். சனிபகவான் மட்டும் விதிவிலக்கா...

    நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில்      தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார் என்று தெரிந்தும் உன் திரு விளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே என்னை மன்னித்தருளும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார்.

    என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனி பகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.

    பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்யம் இவற்றை முன்னிறுத்தி தான். இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும்  சங்கடத்திலிருந்து காக்கும் வேங்கடவனை வழிபடுவோம். சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்கத்தான் வேங்கடவன் இருக்கிறாரே... 
    ×