பெருமாள் கோவில் தீர்த்தத்தின் முக்கியத்துவம்

தீர்த்தத்தை மூன்று முறை அருந்தி, பின் அதனை தங்கள் தலையில் தெளித்துக் கொள்வது வழக்கம்.பெரும்பாலும் துளசி இலைகளுடன் இந்த தீர்த்தம் வழங்கப்படும்.
பெருமாள் கோவில் தீர்த்தத்தின் முக்கியத்துவம்
Published on

பெருமாளின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட நீரால் இந்த தீர்த்தம் புனிதமாகிறது. இந்த புனித தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. பெருமாளின் ஆசியையும், அருளையும் பெறுவதற்காக தீர்த்தம் வழங்கப்படும்.

பெரும்பாலும் துளசி இலைகளுடன் இந்த தீர்த்தம் வழங்கப்படும். துளசி இலைகளுக்கே மகத்துவம் உண்டு, அது பெருமாளின் பிரசாதமாக இருக்கும் போது இன்னும் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தீர்த்தத்தை பெறும் முறை

முதலில் தீர்த்தத்தை வாங்குவதற்கு முன், பக்தர் சடாரி அல்லது சடகோபம் மீது தலையை வைத்து இறைவனின் பாதங்களை வணங்க வேண்டும். இறை தரிசனத்திற்குப் பிறகு, பக்தரின் தலையில் சடாரி (பெருமாளின் திருவடியாக பாவிக்கப்பட்டது) வைக்கப்படும்.

பின்னர் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படும். பெண்கள் தங்களின் இடது கையில் புடவையின் முந்தானையை பிடித்து, வலது கையை அதற்கு மேல் வைத்து தீர்த்தத்தை வாங்க வேண்டும். தீர்த்தத்தை மூன்று முறை அருந்தி, பின் அதனை தங்கள் தலையில் தெளித்துக் கொள்வது வழக்கம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com