search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை."

    • தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி 13-ந் தேதி நடைபெறுகிறது.
    • “நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்” என்ற தலைப்பில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

    கோவை,

    தேசிய அஞ்சல் வாரம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு அஞ்சல் துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (உலகளாவிய தபால் ஒன்றியம்) 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டதன் நினைவாக இந்த அஞ்சல் வார கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.

    மக்களிடையே அஞ்சல் துறை பற்றியும், அதனுடைய திட்டங்களை பற்றியும் பொதுமக்களுக்கு அஞ்சல் துறையினர் செய்து வரும் சேவைகள் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த ஒரு வாரத்தில் நடத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

    இந்த ஆண்டு "நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்திய அஞ்சல் துறையினரின் பங்கு" என்பதனை குறிக்கும் வகையில் "நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்" என்ற தலைப்பில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, இன்று (9-ந் தேதி) உலக தபால் தினமும், 10-ந் தேதி வலுவூட்டல் தினமாகவும், 11-ந் தேதி தபால் தலை சேகரிப்பு தினமாகவும், 12-ந் தேதி தபால்கள் மற்றும் பார்சல் தினமாகவும் கடைசி நாளான 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினமாகவும் அனுசரிப்பது என அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக இன்று காலை 10.30 மணியளவில் கோவை தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் வார கொண்டாட்டத்தின் தொடக்க விழா நடக்கிறது. இதனை கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கோபாலன், ஆர்.எம்.எஸ். கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அகில் நாயர் தொடங்கி வைக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகள் மற்றும் ஒருவார நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோவை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு ஏற்பாடு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், பள்ளி குழந்தைகள் அஞ்சலகத்தின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகளும், அஞ்சல் ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முக்கிய நிகழ்வாக, பள்ளி குழந்தைகள் தங்களது 5-ம் வயதிலும், 15-ம் வயதிலும் ஆதார் அட்டை யில் உள்ள கைரேகை, புகைப்படம் மற்றும் கண் கருவிழி, ஆகியவற்றை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதற்கு உதவி யாக 13-ந் தேதி சிறப்பு ஆதார் கவுண்டர் பள்ளி குழந்தைகளுக்காக கோவை தலைமை அஞ்சலகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த ஆதார் கவுண்டர் பள்ளிக்கு சென்றுவிட்டு வரும் குழந்தைகள் தங்களது ஆதார் சேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கோவை முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு தெரிவித்துள்ளார்.

    • கூலித் தொழிலாளியான அய்யாசாமி குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • அய்யாசாமி பெட்ரோலை மனைவியின் மீது ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றார்.

    கோவை, ஏப் 3-

    கோவை துடியலூர் அருகே உள்ள பெட்டதா புரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி(வயது54). கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி செல்வி(38). இவர்களுக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான அய்யா சாமி தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவரது மனைவி செல்வி கடந்த 4 மாதங்களாக தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது மகனை அழைத்து வருவதற்காக செல்வி பிளிச்சி பஸ் நிறுத்தம் சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அய்யாசாமி தனது மனைவியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

    ஆனால் அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்து அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அய்யாசாமி தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை செல்வியின் மீது ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்வியை மீட்டனர். பின்னர் இது குறித்து அவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அய்யாசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு போட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கோவை,

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் இன்று அ.தி.மு.க. ஒருங்கிைணந்த கோவை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வக்கீல் பிரிவு செயலாளர் இன்ப துரை கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டதை கண் டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுசாமி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி , தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×