search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை"

    • கூலித் தொழிலாளியான அய்யாசாமி குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • அய்யாசாமி பெட்ரோலை மனைவியின் மீது ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றார்.

    கோவை, ஏப் 3-

    கோவை துடியலூர் அருகே உள்ள பெட்டதா புரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி(வயது54). கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி செல்வி(38). இவர்களுக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான அய்யா சாமி தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவரது மனைவி செல்வி கடந்த 4 மாதங்களாக தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது மகனை அழைத்து வருவதற்காக செல்வி பிளிச்சி பஸ் நிறுத்தம் சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அய்யாசாமி தனது மனைவியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

    ஆனால் அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்து அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அய்யாசாமி தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை செல்வியின் மீது ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்வியை மீட்டனர். பின்னர் இது குறித்து அவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அய்யாசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசில் வாக்குமூலம் கூறினார்.
    • அங்கு எங்களிடம் வாக்குவாதம் செய்தார்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள செங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். 2-வது மனைவி கமலா (வயது50). இவரது மகன் குரு (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். 3-வது மனைவி சத்யா.

    நேற்று கமலா, குரு ஆகிய இருவரும் வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இது குறித்து கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தினார்.

    கள்ளக்காதல் பிரச்சினையால் முதல் குற்றவாளி கட்டிட தொழிலாளியான திருப்பத்தூர் மாவட்டம், கூறிசலாபட்டு பகுதியை சேர்ந்த ராமதாஸ் (37) என்பவர் கமலா, குரு ஆகிய இருவரையும் எரித்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். போலீசில் வாக்குமூலம் கூறினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கட்டிட தொழிலாளியான சத்யா கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அங்கு அவரது தந்தை காவேரி, தாய் சாலா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    சத்யாவுக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை செந்தாமரை கண்ணன் கண்டித்துள்ளார். ஆனால் அதனை தொடர்ந்து சத்யா என்னுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.

    நேற்று முன்தினம் நானும், சத்யாவும் செங்கல்பட்டி கிராமத்திற்கு சென்று இருந்தோம். அப்போது செந்தாமரைக்கண்ணன் வந்தார். அங்கு எங்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் வெளியே வந்து செந்தாமரைக்கண்ணன் எனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தார்.

    இதனால் ஆத்திரத்தில் நான் செந்தாமரைக்கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு அவரது வீட்டின் ஜன்னல் வழியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன். அப்போது கமலா, குரு ஆகிய இருவரும் உடல் கருகி மூச்சு திணறி இறந்தனர். ஆனால் செந்தாமரைக்கண்ணன் தப்பி சென்று விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராமதாஸ், சத்யா, காவேரி, சாலா ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×