என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தேன்- கைதான கட்டிட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
- போலீசில் வாக்குமூலம் கூறினார்.
- அங்கு எங்களிடம் வாக்குவாதம் செய்தார்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள செங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். 2-வது மனைவி கமலா (வயது50). இவரது மகன் குரு (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். 3-வது மனைவி சத்யா.
நேற்று கமலா, குரு ஆகிய இருவரும் வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இது குறித்து கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தினார்.
கள்ளக்காதல் பிரச்சினையால் முதல் குற்றவாளி கட்டிட தொழிலாளியான திருப்பத்தூர் மாவட்டம், கூறிசலாபட்டு பகுதியை சேர்ந்த ராமதாஸ் (37) என்பவர் கமலா, குரு ஆகிய இருவரையும் எரித்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். போலீசில் வாக்குமூலம் கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்டிட தொழிலாளியான சத்யா கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அங்கு அவரது தந்தை காவேரி, தாய் சாலா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
சத்யாவுக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை செந்தாமரை கண்ணன் கண்டித்துள்ளார். ஆனால் அதனை தொடர்ந்து சத்யா என்னுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் நானும், சத்யாவும் செங்கல்பட்டி கிராமத்திற்கு சென்று இருந்தோம். அப்போது செந்தாமரைக்கண்ணன் வந்தார். அங்கு எங்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் வெளியே வந்து செந்தாமரைக்கண்ணன் எனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தார்.
இதனால் ஆத்திரத்தில் நான் செந்தாமரைக்கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு அவரது வீட்டின் ஜன்னல் வழியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன். அப்போது கமலா, குரு ஆகிய இருவரும் உடல் கருகி மூச்சு திணறி இறந்தனர். ஆனால் செந்தாமரைக்கண்ணன் தப்பி சென்று விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராமதாஸ், சத்யா, காவேரி, சாலா ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






