search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட"

    • மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அறிவுரை
    • பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் தீயணைப்பு துறை சார்பில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட உதவி தீயணைப்பு துறை அதிகாரி துரை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார். தாளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பசுமை பட்டாசுகள் வெடித்தும், தீயணைப்பு வீரர்கள் பட்டாசு வடிவில் வேடமணிந்தும் மாணவ-மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்யகுமார் கலந்து கொண்டு கூறியதாவது:-

    பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடும் வகையில் இப்படிப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளியில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்காதீர். பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணியகூடாது. குடிசைகள் நிறைந்த பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது. மருத்துவமனை திரையரங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க கூடாது. மொத்தத்தில் பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    • 2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
    • அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள்.

    நாமக்கல்:

    2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை அசம்பாவிதங்கள் இல்லாமல் கொண்டாட தமிழக அரசும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள். 20 இடங்களில் வாகன சோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

    31-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகன ஓட்டுபவர்கள் கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து 100-க்கும், போலீஸ் செயலிக்கும் தகவல் தெரிவிக்கலாம். வழிபாட்டு தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவ–தாக நாமக்கல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். 

    ×