search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாணவ-மாணவிகள் பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும்
    X

    விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாணவ-மாணவிகள் பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும்

    • மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அறிவுரை
    • பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் தீயணைப்பு துறை சார்பில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட உதவி தீயணைப்பு துறை அதிகாரி துரை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார். தாளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பசுமை பட்டாசுகள் வெடித்தும், தீயணைப்பு வீரர்கள் பட்டாசு வடிவில் வேடமணிந்தும் மாணவ-மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்யகுமார் கலந்து கொண்டு கூறியதாவது:-

    பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடும் வகையில் இப்படிப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளியில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்காதீர். பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணியகூடாது. குடிசைகள் நிறைந்த பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது. மருத்துவமனை திரையரங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க கூடாது. மொத்தத்தில் பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×