search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில்லா"

    • மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அறிவுரை
    • பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் தீயணைப்பு துறை சார்பில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட உதவி தீயணைப்பு துறை அதிகாரி துரை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார். தாளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பசுமை பட்டாசுகள் வெடித்தும், தீயணைப்பு வீரர்கள் பட்டாசு வடிவில் வேடமணிந்தும் மாணவ-மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்யகுமார் கலந்து கொண்டு கூறியதாவது:-

    பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடும் வகையில் இப்படிப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளியில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்காதீர். பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணியகூடாது. குடிசைகள் நிறைந்த பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது. மருத்துவமனை திரையரங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க கூடாது. மொத்தத்தில் பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    • மதுபோதையில் வாகனத்தை இயக்குவது.
    • நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததுமாகும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:- சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா். இதனடிப்படையில் திருப்பூா் மாவட்டத்தில் சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாலை விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணம் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது, மதுபோதையில் வாகனத்தை இயக்குவது, வாகனத்தை இயக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததுமாகும்.ஆகவே சாலை விபத்து தொடா்பாக போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்தில்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

    இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா்ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை காவல் கண்காணிப்பாளா் வனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    ×