search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலோ"

    • 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெற்றன.
    • நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெற்றன.

    இன்றுடன் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக அணி 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் பதக்கங்கள் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை மகாராஷ்டிரா அணி பிடித்தது.

    இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு அமைய அனைத்து தகுதியும் உள்ளது.

    பதக்க பட்டியலில் தமிழ்நாடு இந்த முறைதான் முதல் 3 இடத்திற்குள் வந்துள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.

    முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கிராமபுற ஏழை, எளிய மாணவர்களை கண்டறிய வாய்ப்பாக அமைந்தது.

    சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு மாறும். விளையாட்டு என்பதை இயக்கமாக தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது.

    அனைவரும் விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

    பங்கு கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றிகள்.

    கிராமங்களில் இருந்தும் வீரர்கள் வரவேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்.

    சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார். விழாவின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கேலோ இந்தியா தொடக்க விழாவுக்கு பிறகு பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.

    இந்த சந்திப்பு நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

    சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.
    • வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும்.

    சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார். பிறகு, வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் அழகு, கலாச்சாரம், மொழி உங்கள் வீடு போலவே உணர வைக்கும். இந்தியா முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள் இங்கு வந்துள்ளனர்.

    வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும். 2024ல் விளையாட்டுத் துறைக்கு சிறந்த தொடக்கமாக கேலோ இந்தியா அமைந்துள்ளது.

    அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறந்து விளையாட்டு வீரர்கள் உள்ளனர். தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி.

    விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கிறேன். இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.

    கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.

    ஆசிய போட்டிகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது.

    கேலோ இந்தியா விளையாட்டு சின்னத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். கடற்கரை விளையாட்டுகள், சுற்றுலா துறையில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது. தேசிய கல்வி திட்டத்தில் விளையாட்டை முக்கிய அங்கமாக வைத்துள்ளோம்.

    விளையாட்டுகள் மூலம் அது சார்ந்த தொழில்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விளையாட்டு வீரர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். மிகப்பெரிய இலக்குகளை சாதிக்கும் திறன் நம்மிடம் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்தோம்.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் என்பதை உள்ளடக்கமாக கொண்டது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே அரசின் குறிக்கோள் ஆகும்.

    ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற உழைத்து வருகிறோம்.

    கடந்த ஆண்டு பல்வேறு சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளோம். கேலோ இந்தியா முத்திரையில், வீர மங்கை வேலுநாச்சியார் இடம்பெற்றிருப்பது பெருமை.

    மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.
    • இன்று முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் போட்டி நடக்கிறது.

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.

    முன்னதாக, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஐஎன்எஸ் அடையார் தளத்திற்கு சென்றார்.

    பிறகு, அடையாறில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    வழி நெடுகிலும் கலை நிகழ்ச்சிகளை ரசித்தபடியே பிரதமர் மோடி காரில் பயணித்தார். அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், நிசித் பிராமணிக், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.18 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், ஆயிரம் நடுவர்களும் கலந்து கொள்கிறார்கள். 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் போட்டிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று சென்னையை அடுத்து நாளை திருச்சி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
    • விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.

    நேரு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தைடைந்ததை தொடர்ந்து, தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது.

    பிறகு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேலோ இந்தியாவின் முத்திரையான வீர மங்கை சிலையை நினைவுத் பரிசாக அளித்தார்.

    தொடர்ந்து, ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.

    பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தாக்கூரை வரவேற்கிறேன். தமிழக அரசின் கனவு நனவான தருணம் இது. 6வது கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது.

    ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தினோம். விளையாட்டுத் துறையில், இந்திய அளவில் தமிழகம் முன்னேறியுள்ளது.

    விளையாட்டுகளையும் கல்வியின் அங்கமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். தமிழக வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

    விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×