search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே அரசின் குறிக்கோள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே அரசின் குறிக்கோள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்தோம்.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் என்பதை உள்ளடக்கமாக கொண்டது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே அரசின் குறிக்கோள் ஆகும்.

    ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற உழைத்து வருகிறோம்.

    கடந்த ஆண்டு பல்வேறு சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளோம். கேலோ இந்தியா முத்திரையில், வீர மங்கை வேலுநாச்சியார் இடம்பெற்றிருப்பது பெருமை.

    மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×