search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎஸ் ஈஸ்வரப்பா"

    • கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    • எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டி.

    கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அதன்படி, கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விட்ட நிலையில், ஈஸ்வரப்பா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஹாவேரி தொகுதியில் தனது மகனுக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் ஈஸ்வரப்பா, ஷிமோகாவில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, கட்சியின் மாநில தலைவரையும், எடியூரப்பாவையும் ஈஸ்வரப்பா கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கேஎஸ் ஈஸ்வரப்பா விருப்பம் தெரிவித்து இருந்தார்.
    • ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மந்திரி கேஎஸ் ஈஸ்வரப்பா தொகுதியில் மாற்று வேட்பாளர் போட்டியிடுகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று இருக்கிறது. போட்டியிடுவோர் இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான கேஎஸ் ஈஸ்வரப்பா போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். எனினும், இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மாற்று வேட்பாளர் இவரது தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்து இருந்தது. பாஜக-வின் இந்த முடிவை அடுத்து கேஎஸ் ஈஸ்வரப்பா ஏமாற்றம் அடைந்து இருந்த போதிலும், கட்சியின் முடிவை ஏற்றுக் கொண்டார்.

     

    இந்த நிலையில், பிரதமர் மோடி கேஎஸ் ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலும், கட்சி முடிவை ஏற்றுக் கொண்டதற்காக ஈஸ்வரப்பாவை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும் கட்சி மீது அவர் வைத்திருக்கும் விசுவாசத்தை பாராட்டினார்.

    "கட்சி மீது நீங்கள் வைத்திருக்கும் பொறுப்பை வெளிப்படுத்திவீட்டீர்கள். உங்களை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இதனால் தான் உங்களிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தேன்," என்று பிரதமர் மோடி கேஎஸ் ஈஸ்வரப்பாவிடம் தெரிவித்தார். அடுத்த முறை கர்நாடகா வரும் போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    "உங்களை போன்றே தலைவர் என்னை போன்ற சாதாரண பணியாளருக்கு அழைப்பு மேற்கொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக வெற்றிக்குத் தேவையான அனைத்து பணிகளையும் கட்டாயம் மேற்கொள்வேன்," என்று முன்னாள் மந்திரி கேஎஸ் ஈஸ்வரப்பா பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

    ×