search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடாரைவல்லி"

    • கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள்.
    • திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள்.

    மார்கழி மாதத்தில் கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள். திருப்பாவையின் 27-வது பாசுரம், "கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா" என்ற பாசுரம். திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள் என்று இதைச் சொல்லுவார்கள். குறையொன்றுமில்லாத கோவிந்தனை வழிபடுகின்றபொழுது ஒவ்வொருவர் மனக்குறையும் தீர்ந்துவிடும் என்பதால், அன்று புத்தாடை அணிந்து, ஆண்டாள் புடவை எடுத்து வைத்து, ஆண்டாள் படத்துக்கு பூமாலை சூட்டி, வணங்குவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில், ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தோடு காட்சி தருவார். ஒருமுறை ராமானுஜர் ஆண்டாள் கோரிக்கையைநிறை வேற்றுகின்ற வண்ணம், நூறு அண்டா வெண்ணெயும் நூறு அண்டா அக்கார அடிசிலும், மதுரை திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்ப்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரைவல்லி அன்று 108 பாத்திரத்தில் வெண்ணெயும் அக்கார அடிசிலும் நிவேதனம் ஆகும்.

    நாம் அன்று வெண்ணெயும் அக்கார அடிசிலும் (பாலில் நெய்விட்டு செய்த சர்க்கரைப் பொங்கல்) வைத்து ஆண்டாளை வணங்க நம்முடைய மனோரதம் நிறைவேறும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். கூடாரைவல்லி நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலை அணிவித்து வணங்குவதன் மூலமாக சகல சவுபாக்கியங்களும் பெறலாம்.

    ×