search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்குகள்"

    • பொன்னேரி பகுதியில் குரங்குகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
    • பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள் முழுவதையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் குரங்குகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதியில் ஹாயாக சுற்றி வருகின்றன.

    வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை தின்று சென்று விடுகிறது. இதனை தடுக்க வரும் பொது மக்களையும் கடித்து மிரட்டுகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் பொன்னேரி ரெயில் நிலையத்திலும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை விடாமல் துரத்துகிறது.

    அவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் பழங்களை குரங்குகள் பறித்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு வரவே பயணயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    திருவாயர்பாடி, வேண்பாக்கம் ரெயில் நிலையத்திலும் குரங்குகள் அட்டகாசம் இருப்பதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர். பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள் முழுவதையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

    • இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
    • பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன,

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.

    அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. அரகண்டநல்லூர் பேரூ ராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாராட்டு தெரிவித்தனர்.

    • அபிராமம் தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர், கிடைக்காமல் குரங்குகள் வெளியேறி அபிராமம் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றிதிரிகின்றன.

    அபிராமம், வல்லகுளம், விரதக்குளம், பள்ளபச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைமரங்களில் தாவி குதித்து வருவதுடன் தென்னை மரங்களையும், தென்னங்காய்களையும் நாசம் செய்து வருகின்றன. மேலும் அபிராமம் தெருக்களில் குரங்குகள் சுற்றிதிரிவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.

    அபிராமம் தெருக்க ளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குரங்குகள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம்- கோவில்பட்டி செல்லும் சாலையில் 13-வது வார்டு பகுதி உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், அவற்றின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவை வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கி செல்கின்றன. அவைகளை விரட்ட முயற்சிப்பவர்களின் மீது பாய்ந்து கடித்து காயப்படுத்துகின்றன.

    குடியிருப்பு பகுதிகளில் உள்ள தென்னை, மாதுளை, கொய்யா போன்ற மரங்களில் ஏறி, காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. மேலும் இந்த பகுதியில் ஒரு வருட காலமாக இந்த குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால் வீடுகளில் அச்சத்துடன் முடங்கி உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வா கத்திற்கும், வனத்துறை அலுவலகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.
    • சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து குரங்குகள் பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலைப்பகுதியில ஏராளமான குரங்குகள் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.

    அடிவாரப் பகுதியில் சுற்றி திரிந்த குரங்கு கூட்டம் கடந்த சில நாட்களாக அங்கிருந்து வெளியேறி சென்னிமலை நகருக்குள் நுழைந்து விட்டது. தினமும் குரங்கு கூட்டம் வீடுகளுக்கு படையெடுத்து வருகிறது.

    வீடுகளின் ஜன்னல் திறந்து இருந்தால் உள்ளே நுழைந்து உணவுப் பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் வெயிலில் காயவைக்கும் உணவுப் பொருட்களையும் எடுத்து சென்று விடுகிறது.

    அதோடு இல்லாமல் சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் சென்னிமலை நகருக்குள் குரங்கு கூட்டம் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    உணவுப் பொருட்களை எடுத்து செல்லும் குரங்குகள் தாக்கி விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து இந்த குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குரங்குகளின் தொல்லை குறித்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
    • தனியார் ஏஜென்சியை சேர்ந்த 3 குழுவினர் டெண்டர் எடுத்து குரங்குகளை பிடிக்க 10 பேரை நியமித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், அரட்ல கோடா கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு வந்த குரங்குகள் அங்குள்ள வீடுகளில் புகுந்து தொல்லை கொடுத்து வந்தது. தோட்டங்களில் புகுந்து பழம், காய்கறிகளை கடித்து நாசம் செய்து வந்தன. மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவரையும் கடித்து குதறியது.

    கடந்த சில ஆண்டுகளாக குரங்குகளின் தொல்லை எல்லை மீறி போகவே கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரங்குகளின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென எண்ணினர்.

    குரங்குகளின் தொல்லை குறித்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரங்குகளை பிடிப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. தனியார் ஏஜென்சியை சேர்ந்த 3 குழுவினர் டெண்டர் எடுத்து குரங்குகளை பிடிக்க 10 பேரை நியமித்தனர். அவர்கள் அரட்ல கோடா கிராமத்திற்கு வந்து குரங்களை பிடித்தனர். பிடிக்கப்பட்ட 300 குரங்குகளை கூண்டில் அடைத்தனர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மூலம் 12 மைல் தூரத்தில் உள்ள படேறு அடர்ந்த வனப்பகுதியில் குரங்குகளை விட்டனர். குரங்குகளின் அட்டகாசம் தீர்ந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    • நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
    • குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவைகள் ஆளில்லாத வீடுகளுக்குள் புகுந்து உணவு தேடி விட்டு, எதுவும் கிடைக்காத நிலையில் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தூக்கிச் செல்கின்றன.

    திடீரென வீடுகளுக்குள் வருவதால் சிறுவர்கள், பெண்கள் அச்சமடைகின்றனர். இதனால் குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளைநிலங்களில் நாசப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
    • இரும்பு கூண்டுக்குள் நிலக்கடலை, வாழைப்பழம், தக்காளி போன்ற பொருட்களை வைத்து 8 குரங்குகளை பிடித்தனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெரு, லிங்காபுரம், முத்து மாரியம்மன் கோவில் தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது.

    குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளைநிலங்களில் நாசப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.

    இதுகுறித்து ஊராட்சி துணை தலைவர் கோவிந்த சாமி செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வனத்துறை அலுவலர் கமலாசனன், வனக்காப்பாளர் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு உள்ளுர் மக்கள் உதவியுடன் இரும்பு கூண்டுக்குள் நிலக்கடலை, வாழைப்பழம், தக்காளி போன்ற பொருட்களை வைத்து 8 குரங்குகளை பிடித்தனர்.

    பின்னர் அவைகளை பாதுகாப்பாக, சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் காட்டுக்குள் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • முதல் நாள் 3 கூண்டுகள் வைக்கப்பட்டதில் ஒரு கூண்டில் எந்த குரங்கும் சிக்கவில்லை.
    • குரங்குகள் குடும்பமாக வாழும். அவை எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும்.

    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பேரூராட்சிக்கும், வனத்துறைக்கும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து பேரூராட்சி நிர்வாகமும், அச்சரப்பாக்கம் கோட்ட வனத்துறையும் இணைந்து பேரூராட்சிக்கு வெங்கடேசபுரம் காந்தி நகர், நேரு நகர், கஸ்தூரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கூண்டுகள் அமைத்து குரங்குகளை பிடித்தனர்.

    முதல் நாள் 3 கூண்டுகள் வைக்கப்பட்டதில் ஒரு கூண்டில் எந்த குரங்கும் சிக்கவில்லை. 2-வது கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளும், 3-வது கூண்டில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகளும் அடைபட்டன. 2-வது நாள் 26 குரங்குகள் பிடிபட்டன.

    இந்தநிலையில் ஒரே கூண்டில் 70-க்கும் அதிகமான குரங்குகளை வனத்துறையினர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும், இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

    ஆனால் இதற்கு வனத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. 3 கூண்டுகள் வைத்தும் ஒரு கூண்டில் எந்த குரங்குகளும் சிக்காததும், ஒரே கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கி உள்ளதே? என்று வனத்துறையினரிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:-

    குரங்குகள் குடும்பமாக வாழும். அவை எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும். 70 குரங்குகள் வரை ஒரே குடும்பாக வசிக்கும். நாங்கள் வைத்த கூண்டில் ஒரே குடும்பத்திலுள்ள குரங்குகள் குழுவாக கூண்டுக்குள் செல்லும்போது இவ்வாறு சிக்குவது உண்டு. அப்படிதான் சிக்கி இருந்தது. சித்ரவதை செய்யவில்லை. ஒரே கூண்டில் பிடிபிட்ட குரங்குகளை தனியாக பிரித்து மற்றொரு கூண்டுகளில் அடைத்து அனைத்தையும் வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×