search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை படத்தில் காணலாம்.

    விளாத்திகுளம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    • குரங்குகள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம்- கோவில்பட்டி செல்லும் சாலையில் 13-வது வார்டு பகுதி உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், அவற்றின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவை வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கி செல்கின்றன. அவைகளை விரட்ட முயற்சிப்பவர்களின் மீது பாய்ந்து கடித்து காயப்படுத்துகின்றன.

    குடியிருப்பு பகுதிகளில் உள்ள தென்னை, மாதுளை, கொய்யா போன்ற மரங்களில் ஏறி, காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. மேலும் இந்த பகுதியில் ஒரு வருட காலமாக இந்த குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால் வீடுகளில் அச்சத்துடன் முடங்கி உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வா கத்திற்கும், வனத்துறை அலுவலகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×