search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்திய"

    • முன்விரோதத்தில் மோதல்
    • ஆத்திரமடைந்த அஜய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அருண் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்துள்ளனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (வயது 46). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (25). அருண்குமார் கட்டிட தொழிலாளியாகவும், அஜய் டிரைவராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அருண் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜய், அவரிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

    இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அருண் வீட்டு ஜன்னலை அடித்து உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்டமோதலில் அருண் மற்றும் அஜய் ஆகிய இருவரும் ஒருவரை யொருவர் கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்ட னர். இந்தமோதல் சம்பவம் தொடர்பாக தக்கலை போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் தனித் தனியாக புகார் கொடுக் கப்பட்டது. அருண் கொடுத்த புகாரின் பேரில் அஜய், ராஜ கோபாலன், சேகர் ஆகியோர் மீதும் அஜய்கொடுத்த புகாரின்பேரில் அருண் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்நிலையில் அஜய்யை கத்தியால் குத்திய அருணை போலீசார் கைது செய்தனர். அஜய் படுகா யங்களுடன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை ெபற்று வருகிறார்.

    • வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் ஆத்திரம்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் ராமலட்சுமி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பால முத்து (வயது 45). இவர் கன்னியாகுமரியில் போட்டோ எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கணேஷ் (18). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை பாலமுத்து தனது மகன் கணேசிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இரு வருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் தனது தந்தை பாலமுத்துவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பாலமுத்துவின் இடது கண் புருவம், இடது வயிறு பகுதியில் கத்தி குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி துடிதுடித்து க்கொண்டிருந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னி யாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொட ர்பாக கணேசை போலீசார் தேடிவருகிறார்கள்.

    ×